முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகோவை ஜூன் 2 ம்தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ.வை வரும் ஜூன் 2 வரை காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2009-ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மீது வழக்குத் தொடரப்பட்டது.  இந்த வழக்கில் வைகோ அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்படார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

பின்னர் அவரது காவல் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இன்றுடன் 10 நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார். மூன்றாவது முறையாக வைகோவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்முறை, ஜூன் 2-ம் தேதிவரை வைகோவை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்