எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர், கர்நாடகம் மாநிலத்தில் பாரதிய ஜனதாவில் உள்கட்சி மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதனால் கட்சி மேலிடம் கவலை அடைந்துள்ளது.
தென்னிந்தியாவில் முதன் முதலாக கர்நாடகத்தில்தான் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் எடியூரப்பாதான். கர்நாடகாவில் பாரதிய ஜனதா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எடியூரப்பா.
கர்நாடக மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சித்தராமையா இருக்கிறார். மாநிலத்தில் வரும் ஆண்டு ஆரம்பத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது. இதனையொட்டி கர்நாடகத்தில் பாரதிய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாதான் என்று அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் அமீத்ஷா அறிவித்துள்ளார். ஆனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலானது வெற்றியை பாதித்து விடுமோ என்று கட்சி மேலிடம் வருத்தத்தில் உள்ளது.
மேலும் மாநில பாரதிய ஜனதா தலைவராக உள்ள எடியூரப்பா, அடுத்த முதல்வர் அமீத்ஷாதான் என்று அறிவித்திருப்பதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் தனியாகவும் ரகசியமாகவும் கூடி பேசி வருகிறார்கள். அதோடுமட்டுமல்லாது எடியூரப்பாவை அழைக்காமல் கட்சி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிருப்பதியாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா கடும் குற்றச்சாட்டை எடியூரப்பா மீது சுமத்தியுள்ளார். எடியூரப்பா இஷ்டம்போல் செயல்படுகிறார் என்றும் அவர் நோக்கத்தின்படி கட்சி நிர்வாகிகளை நியமித்து வருகிறார் என்றும் கட்சியின் விசுவாசிகளையும் பாதுகாவலர்களையும் அவர் கலந்தாலோசிப்பதில்லை என்று ஈஸ்வரப்பா குற்றஞ்சாட்டியுள்ளார்.
உட்கட்சி பூசலுக்கு காரணம் கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ்தான் காரணம் என்றும் எடியூரப்பா குற்றஞ்சாட்டியுள்ளார். இவர் மாநில கட்சி விவகாரத்தில் அதிகம் தலையிடுகிறார் என்றும் எடியூரப்பா நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு கூட்டத்தில் பேசிய ஈஸ்வரப்பா, தனிநபர் முக்கியம் அல்ல. முதலில் தேசம், இரண்டாவது கட்சி. அதன் பின்னர்தான் தனிநபர் என்று எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் எங்களுக்கு கற்பித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். கர்நாடக பா.ஜ. தலைவரும் வருங்கால முதல்வரும் எடியூரப்பாதான் என்று அமீத்ஷா அறிவித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேசமயத்தில் எடியூரப்பா தன் இஷ்டம் போல் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் ஈஸ்வரப்பா மேலும் கூறியுள்ளார்.
மாநில பா.ஜ.க.வில் தலைவர்களிடையே மோதல் போக்கு அதிகரித்து இருப்பதற்கு கட்சி மேலிடம் கவலை அடைந்துள்ளது. தென்னிந்தியாவில் கடந்த 2008-முதல் 13 வரை கர்நாடாகவில்தான் முதன் முதலாக பாரதிய ஜனதா ஆட்சி இருந்தது. ஆனால் அப்போது கட்சியில் மோதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக 3 முதல்வர்கள் மாற்றப்பட்டனர். அதன்பின்னர் வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்று மேலிடம் கருதுகிறது. தலைவர்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டிருப்பதால் கட்சியின் வெற்றி பாதிக்குமோ என்ற கவலை மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.