முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டி இலக்கிய உலா சார்பில் கலை இளவல் விருது வழங்கும் விழா

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      தூத்துக்குடி
Image Unavailable

 

கோவில்பட்டி

கோவில்பட்டி இலக்கிய உலா சார்பில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பல்கலைக்கழக பருவத்தேர்வுகளின் மதிப்பெண் மற்றும் தனித்திறன் அடிப்படையில் கோவில்பட்டி கலை இளவல் 2017 என்ற விருதுபரிசு வழங்கி பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது.

பலர் பங்கேற்பு

 கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்வுக்கு இலக்கிய உலா புரவலர்கள் வினோபா தலைமை வகித்தார். பிரபாகரன் முன்னிலை வகித்தார். பி எஸ் என் எல் இளநிலைப் பொறியாளர் சவரிராஜ் அனைவரையும் வரவேற்றார். அரிமா வெங்கடாசலம் அஞ்சல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், அரிமா விநாயகம் மனித நேய உதவும் கரங்கள் நிறுவனர் இந்தியன் பிரகாஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விருதுகள்

 கோ.வெ.நா கல்லூரி, கோ.வெ.நா கல்லூரி (சுயநிதி பிரிவு), எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி, புனித ஓம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றை கல்லூரியை சார்ந்த 72 மாணவ மாணவிகளுக்கு கோவில்பட்டி கலை இளவல் 2017 என்று விருதுகள் வழங்கி எஸ்.எம் அகாடமி நிறுவனர் அழகர்பாண்டியன் பாராட்டினார். இலக்கிய உலா இரவீந்தர் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்