முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப் வீரர்களின் குழந்தைகள் கல்விச் செலவை ஏற்கும் காம்பீர்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி  - மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் பலியான 25 சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக ஏ.என்.ஐ காம்பீர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியபோது, "சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் பலியான வீரர்களின் புகைப்படங்களைக் கண்டு நிலை குலைந்து போனேன். இறந்த சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளுக்கான செலவை நான் ஏற்கிறேன். இதற்கான பணியை எனது குழுவினர் ஆரம்பித்து விட்டனர். விரைவில் இது தொடர்பாக பகிர்வேன்" என்றார்.  முன்னதாக மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் மண்டலத்துக்குட்பட்ட சுக்மா மாவட்டம், சின்டகுபா அருகே உள்ள கலாபதர் வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், சிஆர்பிஎப் 74-வது படைப் பிரிவைச் சேர்ந்த 99 வீரர்கள் முகாமிட்டிருந்தனர்.  கடந்த வாரம் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியதில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர். இவர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்