முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 நாள் வேலை திட்டத்தில் தவறுகள் கூடாது எம்எல்ஏ கே.வி.சேகரன் பேச்சு

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுக்காவில் உள்ள ஓதலவாடி கிராமத்தில் மனுநீதிநாள் முகாமில் பேசிய எம்எல்ஏ 100 நாள் வேலை திட்டத்தில் எந்த தவறுகளும் ஏற்படக்கூடாது என கூறினார். மனுநீதிநாள் முகாமிற்கு செய்யாறு உதவி கலெக்டர பிரபு சங்கர் தலைமை வகித்தார். வட்டாட்சியர் சாந்தி, மண்டல வட்டாட்சியர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

நலத்திட்ட உதவிகள் 

 நலத்திட்ட உதவிகள் வருவாய் ஆய்வாளர் அமுல்ராஜ் வரவேற்றார். முகாமில் கலந்து கொண்ட எம்எல்ஏ கே.வி.சேகரன், 545 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா, உட்பிரிவு , பட்டா மாற்றம் மற்றும் சிறு விவசாயி சான்று ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது, தற்பொழுது தமிழகம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தை பன்படுத்த கரிசல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் இவவாறு மனு எடுப்பதால் ஏரி குளங்கள் ஆழப்படுததப்படும் நீராதாரம் பெருகும். 100 நாள் வேலை திட்டத்தில் எந்த தவறுகளும் நடக்கக்கூடாது என பேசினார். முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் சிவலிங்கம், காயத்திரி, விஏஒக்கள் ஆனந்தபாபு, மோகன்ராஜ், கவிதா, ராஜசேகர், திருமணி, தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்