முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளாமுத்தூர் கிராமத்தில் நடத்தப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி :பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு வியந்தனர்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      பெரம்பலூர்
Image Unavailable

பெரம்பலூர் மாவட்டம், விளாமுத்தூரில் கிராமத்தில் நேற்று (28.04.2017) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது.

புகைப்பட கண்காட்சி

இக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் , அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்; கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்;ச்சிப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சியினை விளாமுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இப்புகைப்படக் கண்காட்சியினை விளாமுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச்சென்றனர். இந்த நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பாவேந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அ.பாரதி, மு.சுதாகர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்