முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவுக்கு இது கெட்ட நேரம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

சியோல்  - எதிர்ப்பை மீறி நடத்தப் பட்ட வடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி அடைந்தது.இது அந்த நாட்டிற்கு கெட்ட நேரம் என டிரம்ப் கூறி உள்லார்.

ஏவுகணை சோதனை
வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனமும்  எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.ஐ.நா. சபையும்  வட கொரியாவுக்கு எதிரான பொருளாதார தடை விதித்துளளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வட கொரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

மீண்டும் சோதனை
அதை பொருட்படுத்தாத வடகொரியா உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது. தலைநகர் பியாங்யாங் அருகேயுள்ள பக்சாங் என்ற இடத்தில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட சில வினாடிகளில் அது சீறி பாயாமல் வடகொரியாவுக்குள்ளேயே எரிந்து விழுந்து விட்டது. எனவே இச்சோதனை தோல்வி அடைந்துவிட்டது என தென் கொரியாவும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளன.

கெட்ட நேரம்
சோதனை நடத்தப்பட்ட ஏவுகணை எத்தகைய ரகத்தை சேர்ந்தது என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.அதில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி அடைந்து விட்டது. அவர்களுக்கு இது கெட்ட நேரம் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்