எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி - மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மையையும், அதன் பாதுகாப்பையும் நிரூபிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை விரைவில் கூட்டப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
முறைகேடு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் குற்றச்சாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வேண்டாம் என்று கூறி வந்தார். தற்போது உத்தரப்பிரதேச மாநில தேர்தலுக்கு பிறகு இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சமீபத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டம் ஆகிய மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது என்று பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டினார். அதோடுமட்டும் அல்லது இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார் செய்தார். இதுதொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தார். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு நடந்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் புகார்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரசும் கூறிவருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றபோதிலும் எந்தவித விசாரணைக்கும் தயார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்பாடு குறித்து தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் சேர்ந்து புகார் செய்தன. இப்படி புகார் அடிக்கடி கூறப்பட்டு வருவதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தவித தில்லுமுல்லுக்கும் இடமிமல்லை என்பதையும் அது நம்பகத்தனமானது என்பதை நிரூபிக்கவும் சர்வகட்சி கூட்டத்தை விரைவில் கூட்டப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
உறுதி சீட்டு
தேர்தல் முறையில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வரும் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு தாம் யாருக்கு வாக்களித்தோமோ அந்த வாக்கு அவருக்கு போய் சேர்ந்துள்ளதா என்பதை அறியவும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்கச்செய்யவும் வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் அவர்களுக்கு உறுதி சீட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து வெளிவரும்படி செய்யப்படும் என்று நசீம் ஜைதி நேற்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.
நிரூபிக்கப்படும்
இதற்காக சர்வகட்சி கூட்டத்தை விரைவில் கூட்டப்படும். கூட்டத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் சாதகமாக இருக்கும்படி செய்ய முடியாது என்பதையும் தொழில்நுட்பம் ரீதியாக வாக்குப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது என்பதையும் நிரூபிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் புகார் கூறியிருப்பதையும் தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று 16 எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருப்பதையும் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த நசீம் ஜைதி மேற்கண்டவாறு கூறினார்.
15 லட்சம் இயந்திரங்கள்
எதிர்க்கட்சிகளின் இந்த புகாரை தேர்தல் கமிஷன் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மின்னணு இயந்திரம் நம்பகத்தன்மையானது என்பதை நிரூபிக்கும் நேரம் குறித்து தேர்தல் கமிஷன் முடிவு செயல்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து யாராவது சந்தேகம் எழுப்பினாலோ, புகார் கூறினாலோ, அதை மறுக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நம்பகத்தன்மையானது என்பதை நிரூபிக்க தயார் என்று வெளிப்படையாகவே சவால் விட தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. நாம் யாருக்கு வாக்களித்தோமோ அந்த வாக்கு அவருக்கே போய் சேர்ந்துள்ளது என்பதை வாக்களித்தவர்கள் அறிந்துகொள்ளும்படி அடையாள சீட்டு வெளியே வரும்படி செய்யும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க தேர்தல் கமிஷன் ஆர்டர் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக சுமார் 15 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க பொதுத்துறை நிறுவனங்களான பாரத் எல்க்ட்ரானிக்ஸ் லிமிடெட், எல்க்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய கம்பெனிகளிடம் ஆர்டர் கொடுத்துள்ளோம்.
முதல் நாடாக ...
இதற்கான நிதியையும் பெற்றுள்ளோம். வரும் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இந்த இயந்திரங்கள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிமேல் நடக்கவிருக்கும் அனைத்து தேர்தல்களின் இந்தவகையான இயந்திரங்களைத்தான் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். உலகத்திலேயே இந்தியாதான் முதன் முதலாக அனைத்து தேர்தல்களில் [விவிபிஎடி] வகையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்தும் முதல்நாடாக இருக்கலாம். இதன் மூலம் தேர்தல் முறையானது வெளிப்படையாகவும் மக்களிடத்தில் நம்பிக்கையை ஊக்குவிப்பதாகவும் இருக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.