முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா சஸ்பெண்ட்

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : இந்திய பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஊக்கமருந்து சோதனை

இந்தியாவின் பிரபல பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது இந்திய விளையாட்டுத்துறையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தியவின் பளுதூக்கும் வீராங்கனை சுஷிலா பன்வார். இவர் கடந்த ஆண்டு குவஹாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில், தங்கம் வென்று இருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி,பாட்டியாலாவில் நடந்த பயிற்சி முகாமில், இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கமருந்து சோதனை நடந்தது.

சஸ்பெண்ட்

அதில் வீராங்கனை சுஷிலா பன்வார் ஊக்கமருந்து பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக, ஐ.டபிள்யூ.எப். அறிக்கையில்,மொத்தம் 45 இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில் சுஷிலா ரத்த மாதிரியில் மட்டும் தான் 'பாசிட்டிவ்' என்று பதில் கிடைத்துள்ளது. அதனால் அவர் சஸ்பெண்ட செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்