Idhayam Matrimony

எடப்பாடி பழனிசாமி அணியில் எந்த குழப்பமும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - எடப்பாடி பழனிசாமி அணியில் எந்த குழப்பமும் இல்லை எனவும் பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

அப்பட்டமான பொய்
சென்னை ராயபேட்டையில் நிதி அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-எடப்பாடி பழனிசாமி அணியில் எந்த குழப்பமும் இல்லை. அமைச்சர்கள் தனித்தனியாக கூட்டம் நடத்துவதாக கூறுவது அப்பட்டமான பொய். பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். பொதுமக்களின் கோரிக்கைகளை கட்சியினர் மூலம் மனுக்களாக அதிமுக தலைமை அலுவலகத்தில் பெற்று வருகிறோம்.

மனுக்கள் பெறப்படுகிறது
பொதுமக்களின் கோரிக்கைகளை கட்சியினர் மூலம் மனுக்களாக அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள் மனு பெற்று வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் அமைச்சர்கள், தலைமை அலுவலகம் வந்து மனுக்களை பெறுவோம். கட்சி தொண்டர்களிடம் இன்று (நேற்று)மனுக்களை பெற்றிருக்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்