முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று இரண்டாவது கட்ட போலியோ முகாம் : 43 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - குழந்தைகளுக்கான இரண்டாவது கட்ட போலியோ சொட்டு மருந்து, இன்று தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரம் மைய்களில் தீவிர போலீயோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.

இரண்டாம் தவணை
இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்களில் இன்று நடைபெறவிருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசுமருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து முதல் தவணை கடந்த மாதம் 2 ம்தேதி கொடுக்கப்பட்டது. இரண்டாம் தவணை சொட்டு மருந்து இன்று கொடுக்கப்படவேண்டும்.

விரலில் மை
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்துவழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கவேண்டும். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

நடமாடும் குழுக்கள்
இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். பயணம் மேற்கொள்ளும் மற்றும் தொலைதூர பகுதி வாழ் குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் முக்கிய பேருந்து நிலையங்கள், சுங்கச் சாவடிகள், ரயில் நிலையங்கள், விமாநிலையங்களில் 1652 பயண வழி மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்துவழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துவழங்கப்பட உள்ளது.

தன்னார்வலர்கள் ...
போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். தமிழ் நாடு போலீயோ இல்லாத 13- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால், தமிழ் நாட13-வது வருடமாக போலீயோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும்மிகவும் இன்றியமையாததாகும். பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்