முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் விஜயகுமார் எம்.பி.தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்  சோ. இளங்கோ  மாநிலங்களவை உறுப்பினர்  அ. விஜயகுமார் அவர்களின் முன்னிலையில், இளம்பிள்ளை வாதத் தடுப்பு சிறப்பு சொட்டு மருந்து வழங்கும் இரண்டாம்கட்ட முகாமினை, கிருஷ்ணன்கோவில்,  அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்து,பின்னர் தெரிவித்ததாவது:-

போலியோ இல்லாத நாடு

1995-ம் ஆண்டு முதல் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக அகற்ற ஆண்டிற்கு இருமுறை சிறப்பு சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.  உலக சுகாதார நிறுவனத்தால் 2014-ம் ஆண்டு மார்ச் 27-ம் நாள் இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.  இந்த வருடம் போலியோ சிறப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 2-ம் தேதி முதற்கட்ட முகாம் நடைபெற்றது.  இன்று இரண்டாம் கட்ட முகாம் நடைபெறுகிறது.

1,53,000  குழந்தைகளுக்கு

போலியோ இல்லாத நாடாக நமது மாவட்டத்திலுள்ள 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 1,236 மையங்களில் மூலம் 1,53,000 குழந்தைகளுக்கு இரண்டாம்கட்ட முகாமில் இளம்பிள்ளைவாடுப்புச் சொட்டு மருந்து வழங்க, மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  மக்கள் அதிகமாக கூடும் இடங்களான புகைவண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூம்புகார் படகுத்துறை மற்றும் காந்திமண்டபம் ஆகிய இடங்களில் 17 முகாம்களும், உரிய பேருந்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் நடமாடும் குழுக்கள் 8-ம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம் ஆய்வுப் பணிகளுக்கு 156 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டிலுள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, இளம்பிள்ளை வாதத் தடுப்பு சொட்டு மருந்தினை போட்டு, நோயற்ற வாழ்வினை வாழ வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், நாகர்கோவில் கோட்டாச்சியர் ஆர்.ராஐகுமார், அரசு வழக்கறிஞர் ஞானசேகரன், கனகராஐன், நாஞ்சில் சந்திரன் மற்றும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago