முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.25 லட்சம் மதி ப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சலவை கூடத்தினை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 1 மே 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.- மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.92 கோவலன் நகரில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2015-2016 இருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள சலவை கூடத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.சந்தீப் நந்தூரி,  தலைமையில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர்  .செல்லூர் கே.ராஜீ அவர்கள்  ) திறந்து வைத்தார்.  
 இந்த சலவை கூடத்தில் ஒரே நேரத்தில் சுமார் 20 நபர்கள் சலவைப் பணியினை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சலவைப்பணிக்கு தேவையான தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சலவை செய்த துணிகளை வைப்பதற்கு பாதுகாப்பு அறையும்  அமைக்கப்பட்டுள்ளது. சலவைக் கூடத்தினை சுற்றி மரக்கன்றுகளையும்  அமைச்சர் அவர்கள் நட்டு வைத்தார்.
 இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப. நகரப்பொறியாளர்  மதுரம், உதவி ஆணையாளர் திருமதி.கௌசலாம்பிகை, செயற் பொறியாளர் சேகர், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல் மற்றும் பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்