முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      வேலூர்
Image Unavailable

 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் நேற்று ஆஸ்கார் மினி அரங்கில் கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பா.செங்குட்டுவன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

ஆலோசனைக் கூட்டம்

தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட கழக பொருளாலரும் முன்னாள் முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொடர்ந்து செயல்படுவது எனவும், மேலும் புரட்சித் தலைவி அம்மா மரணத்தில் மறைந்துள்ள மர்மத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவர பாடுபடும் அண்ணன் ஓ.பி.எஸ் தலைமையேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதியிலும் கிளை, வட்டம், மாவட்டம் ஒன்றிய பேரூர்க் கழக, மாநகராட்சிகளில் வீடு வீடாக சென்று அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களின் பணிகளை எடுத்துரைப்பது கழக நிர்வாகிகளை ஒன்றிணைத்து அண்ணன் அவர்களுடைய கரத்தை வலுபடுத்தும் வகையில் செயல்படுத்துவது அதே போன்று வேலூர் மாவட்டத்திற்கு ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தரும் அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களை மாவட்ட எல்லையில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பதென இக்கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நாராயணன், தலைமைக் கழக பேச்சாளர் பெல் கார்த்திகேயன் கே.வி.குப்பம் தொகுதி மு.செயலாளர் டி.ஆர்.முரளி மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு முல்லைவேந்தன் எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் மூர்த்தி, வேலூர் மாநகரம் ஹரி துளசிராமன் காட்பாடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, பிரம்மபுரம் வெங்கடேசன் முன்னாள் கவுன்சிலர்கள் சுப்பிரமணி, தாமோதரன், மு.மாநகர, மாவட்ட து.செயலாளார்கள் இரா.முனியம்மாள், மற்றும் வாசுதேவன், கிருஷ்ணன், இராஜேந்திரன், வினாயகமூர்த்தி, ஆஸ்கார் சிவகொழுந்து, நடராஜன், ராகவன், ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்