முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரூரில் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன சார்பி தொழில்நுட்ப கலந்தாய்வு கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      தர்மபுரி
Image Unavailable

 

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி , பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிட் கேபிள் தொழிற்நுட்ப கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கலந்தாய்வுக் கூட்டம்

இந்த நிலையில் அரூரில் பகுதி கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான தொழில் நுட்ப கலந்தாய்வுக் கூட்டம் அரூர் வட்டார கேபிள் டிவி செயற்பாட்டாளர் சசிக்குமார் தலைமையில் நடைபெற்றது.இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் தர்மபுரி கேபிள் டிவி தாசில்தார் லதா கலந்துக் கொண்டு, வருங்காலங்களில் டிஜிட்டல் முறையில் கேபிள் டிவி செயல்படுத்துவது குறித்தும், சந்தாதாரர்களுக்கு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் விரைவாகவும், நன்றாகவும் சேவை செய்ய வேண்டும் என்றும், மேலும் இச்சேவையில் ஏற்படும் முன்னேற்றங்கள் போன்றவற்றை கலந்தாய்வில் விளக்கி பேசினார்.

பின்னர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு டிஜிட்டல் முறையில் இணைப்பிற்கான படிவம் வழங்கப்பட்டது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அரூர் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பிப்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலந்துக் கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்