முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் பேருந்து நிழற்குடை மற்றும் உயர்கோபுர மின்விளக்கு : அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் , வளர்மதி துவக்கி வைத்தனர்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் அவர்களின் தொகுதி உள்ளுர் வளர்ச்சி நிதியிலிருந்து புதியதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் பேருந்து நிழற்குடை மற்றும் உயர்கோபுர மின்விளக்கை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

 புதிய நிழற்குடை

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் அவர்களின் தொகுதி உள்ளுர் வளர்ச்சி நிதியிலிருந்து திருச்சிராப்பள்ளி, காஜாமலை காலனி பேருந்து நிறுத்தத்தில் ரூபாய் 5 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணிகள் பேருந்து நிழற்குடை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், மேக்குடி ஊராட்சியில் ரூபாய் 3 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய உயர்கோபுர மின்விளக்கை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்