முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பவானியில் அதிகபட்சமாக 38 மில்லி மீட்டர் பதிவு

புதன்கிழமை, 3 மே 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1½ மாதங்களுக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் 104 டிகிரிக்கு மேல் வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. அதேசமயம் மாலை நேரங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தும் வருகிறது. நேற்று முன்தினம் பவானி, பெருந்துறை, கவுந்தப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதில் பவானியில் அதிகபட்சமாக 38 மில்லி மீட்டர் மழை பதிவானது.ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு–பவானி – 38, வரட்டுப்பள்ளம் – 24.2, கவுந்தப்பாடி – 20, பெருந்துறை –20, தாளவாடி – 5, கோபிசெட்டிபாளையம் – 4, அம்மாபேட்டை – 2, கொடிவேரி – 1.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்