எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.- மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் சீராக வழங்குவதற்காக மாற்று ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் ஆணையாளர் சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜீ வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சி 2011 ஆம் ஆண்டு முதல் 51.82 சதுர கிலோ மீட்டரிலிருந்து 147.997 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட மதுரை மாநகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 17 லட்சமாகும். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுப் பகுதிகளில் வைகை அணை, வைகை ஆற்றுப்படுகை நீர் ஆதாரங்கள், காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் மூலம் 94 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது வைகை அணையின் நீர்இருப்பு 139 மில்லியன் கன அடியாக உள்ளது. இவற்றில் 59 மி;ல்லியன் கனஅடி மட்டுமே உபயோகம் செய்யப்படும் நிலையில் உள்ளது. தற்போது மேற்படி ஆதாரங்களின் மூலம் 94 மி;ல்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாநகராட்சியின் பழைய 72 வார்டு பகுதிகளுக்கு ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 65 லிட்டர் குடிநீரும், புதிதாக இணைக்கப்பட்ட வார்டு பகுதிகளுக்கு ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பெய்யாத காரணத்தினாலும், வைகை அணையின் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகின்ற காரணத்தினாலும் மதுரை மாநகருக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பற்றாக்குறையினை சரிசெய்யும் விதமாக மாற்று ஏற்பாடாக வறட்சி நிவாரண பணி மூலம் புதிதாக 500 ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலம் 25 மில்லியன் லிட்டர் தண்ணீரும், தனியாருக்கு சொந்தமான விவசாய கிணறுகளின் மூலம் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரும் மற்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு வறட்சி நிவாரண நிதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளின் மூலம் 20 மில்லியன் லிட்டர் தண்ணீரும், மணலூர் மற்றும் திருப்புவனம் நீரேற்று நிலையங்களின் மூலம் 5 மில்லியன் லிட்டர் தண்ணீரும் சேர்த்து மொத்தம் நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் அதாவது ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 60 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.
மேற்கண்ட வறட்சி நிவாரண பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ.10 கோடியும் மற்றும் அபிவிருத்தி இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியும் என மொத்தம் ரூ.13 கோடி அரசின் மானியமாக பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 215 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. 35 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் 270 குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் வாங்கப்பட்டு வார்டு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.தனியார் டிராக்டர்கள், டேங்கர் லாரிகள் என 153 வாகனங்கள் ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 20 இடங்களில் 8 விட்டமுள்ள ஆழ்துளை கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டு அவற்றில் 7 இடங்களில் பணிகள் முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் மேலக்கால் மற்றும் கோச்சடை பகுதிகளில் நீர் உறிஞ்சும் கிணறுகள் மற்றும் நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் மே 31 க்குள் முடிக்கப்படும்.
கூடுதலாக தேவையான இடங்களுக்கு புதிதாக குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் வாங்கவும், வார்டுப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ.7 கோடி வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் மானியமாக பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்குவதை கண்காணிக்க 57 தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்;. மாநகராட்சி லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரையும் தனியார் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரும் பரிசோதனை செய்வதற்கு மாநகராட்சியின் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே வறட்சிக்காலத்தில் குடிநீர்பற்றாக்குறையினை சமாளிக்கும் வகையில் மதுரை மாநகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் விதமாக மாற்று ஏற்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ், ஆணையாளர் சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, ஏ.கே.போஸ், துணை ஆணையாளர் ப.மணிவண்ணன், உதவி ஆணையாளர்கள் அரசு, பழனிச்சாமி, செல்லப்பா, திருமதி.கௌசலாம்பிகை, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், சந்திரசேகரன், சேகர், உதவிப் செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் மாநகராட்சி அலுவலர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.