எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி, கோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கும் விழா நேற்று (06.05.2017) நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இவ்விழாவில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது,
மக்கள் பிரதிநிதிகள்
அம்மா அவர்களின் வழியில் மக்களுக்காக செயல்பட்டு வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகின்ற அரசாக விளங்கி வருகின்றது. மக்கள் பிரதிநிதிகள் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என அம்மா மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கெல்லாம் கட்டளை இட்டுச் சென்றுள்ளார்கள். அதன்படி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றி தருகின்ற பணிகளை மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் அனைவரும் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்.கடந்த 140 ஆண்டுகால வரலாற்றில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. பருவ மழை பொய்த்தன் காரணமாக காவிரியிலும் நீர் குறைந்து ஆங்காங்கே அமைக்கப்படுகின்ற ஆழ்துளை கிணறுகளிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாத சூழ்நிலை இருந்து வருகின்றது. காவிரிக்கரையை ஒட்டிய பகுதியாக பள்ளிபாளையம் பகுதி இருந்தாலும் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி வருவதற்கு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் வாய்ப்புடைய பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டும் அவ்வாறு வாய்ப்புகள் இல்லாத பகுதிகளில் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து அரசு மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை நல்கிட வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தருவதிலும் அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது. குடிநீர் வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசு மக்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றித் தருகின்ற அரசாக விளங்கி வருகின்றது. அதேபோல் மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை தருகின்ற அரசாகவும் அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் அரசு தொடர்ந்து சிறந்து விளங்கி வருகின்றது.
பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி கோட்டக்காடு பகுதி மக்கள் தங்களது சொந்த வீடுகளில் வசித்து வந்தாலும் வசித்து வந்த இடத்திற்கு பட்டாக்கள் இல்லாமல் இருந்தது. அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இன்றைய தினம் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. வீடு இருந்தும் மனை அற்றவர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் கொடுக்கப்பட்டுள்ளதன் மூலம் 65-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்திற்கு சொந்தக்காரர்களாக உருவாகி உள்ளனர். இதுபோன்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றும் விதமாகவும் அவர்களின் தரத்தையும், பொருளாதாரத்தையும் உயர்த்தும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அரசு தொடர்ந்து நிறைவேற்றி தந்து கொண்டிருக்கின்றது. அம்மா அறிவித்து செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றது. அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.இவ்விழாவில் வருவாய்த்துறையின் சார்பில் குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி, கோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த 67 பயனாளிகளுக்கு ரூ.16.52 இலட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி வரவேற்புரையாற்றினார். நாமக்கல் சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் ஆர்.சின்னுசாமி, நாமக்கல் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் டி.கே.சுப்பிரமணியம், டி.சி.எம்.எஸ்.தலைவர் பி.என்.கந்தசாமி, பள்ளிபாளையம் முன்னால் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் தி;ரு.எஸ்.செந்தில், பள்ளிபாளையம் முன்னால் நகர்மன்ற தலைவர் தி;ரு.பி.எஸ்.வெள்ளியங்கிரி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பி.சுந்தரம், அரசு வழக்கறிஞர் சந்திரசேகர், பள்ளிபாளையம் அக்ரஹாரம் முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.பி.மாதேஸ்வரன், குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் ரகுநாதன், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், முன்னால் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் இரா.கீர்த்தி பிரியதர்சினி நன்றி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.