முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோயிலில் படுகள நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      திருவண்ணாமலை

ஆரணி கொசப்பாளையம், தர்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழா நடைபெறுவதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை துரியோதன படுகள நிகழ்ச்சி நடைபெற்றது.

படுகள நிகழ்ச்சி

ஆரணி கொசப்பாளையம், தர்மராஜா கோயிலில் ஏப்ரல் 2 அன்று அக்னி வசந்த விழா துவங்கியது. இதனை முன்னிட்டு தினமும் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது. மேலும் தொடர்ந்து நாடக நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. இதில் ஞாயிற்றுக்கிழமை துரியோதன படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழுத்தலைவர் கப்பல் இ.கங்காதரன், செயலாளர் கே.ஆர்.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்