எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் காலேப்பள்ளி, ராயக்கோட்டை வன சரகம் ஊடேதுர்கம் காப்புகாடு பகுதிகுட்பட்ட லட்சுமிபுரம் சின்னாறு பகுதியில் 4.50 லட்சம் மதிப்பில் யானைகள் ஊருக்குள் புகாத வகையில் ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள 190 பாரோ ஒயர் தடுப்பு துண்கள் அமைக்கப்பட்டுள்ளதையும், சிவலிங்கம்புரம் கத்;தாளப்பள்ளம் ஓடையின் குறுக்கே ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கசிவு நீர் குட்டை தடுப்பணை பணிகளை வனத்துறை அமைச்சர் திண்டுகல் சி.சீனிவாசன், கால்நடை பராமரிப்புத்துறை பா.பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அமைச்சர்கள்ஆய்வு
பின்பு கேரட்டி மலை வாழ் இன மக்கள் 24 பேருக்கு சிறு வன மகசூல் பங்கீட்டு தொகை, தனியார் நிலத்தில் இடைபடு காடுகள் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 449 பயனாளிகளுக்கு ஊக்க தொகையாக ரூ.18 லட்சத்து 5 ஆயிரத்து 381 க்கான காசோலைகளையும், தருமபுரி வனக்கோட்டத்தில் வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 5 பயனாளிகளுக்கு ரூ.53 ஆயிரத்து 250 மதிப்பிலான நிவராண தொகைக்கான காசோலைகள் என மொத்தம் 478 பயனாளிகளுக்கு ரூ. 30 லட்சத்து 58 ஆயிரத்து 631 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வனத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது:
மறைந்த தமிழக முதல்வர் அம்மா கனவை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க வன இலக்காக மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆய்வு செய்யும் வகையில் இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிகள் மூலம் மக்களுக்கும் மற்றும் வன விலங்குகளுக்கு எவ்வாறு பயன் பெறுகிறது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. தற்போது வனப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் மழைநீர் சேகரித்து வன விலங்குகளுக்கு பயன் பெறும் வகையில் மேலும் உயர்த்தி கட்டப்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதே போல மனிதனுக்கு செய்யப்படவுள்ள பாதுகாப்பு பணியை வன இலக்கா மூலம் செவ்வனே செய்யப்பட்டு வருகிறது.
வன விலங்குகளால் விளை நிலங்களில் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு முறையாக வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வன உயிரிங்களால் ஏற்படும் மனித உயிர் சேதத்திற்கு ரூ. 4 லட்சமும், காயங்களுக்கு தகுந்தவாறு ரூ. 25 ஆயிரம் மற்றும் ரூ. 50 ஆயிரம் என இழப்பீடு வழங்கப்படுகிறது. வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலமாக குடிநீர் தொட்டிகளில் நிரப்பும் பணி செவ்வனே செய்யப்பட்டு வருகிறது. மேலும் பிலிகுண்டு முதல் மணல்மேடு வரை படகு போக்குவரத்து துவக்க வேண்டும் என பரிசல் ஓட்டிகள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பரிசல் இயக்க வனத்துறை மூலம் அனுமதி கோரியதையடுத்து சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசல் ஒட்டிகள் செயல்பட வேண்டும். அதேபோல பரிசல் ஒட்டும் போது பார்வையாளர்கள் உயிருக்கு பாதுகாப்பு இருக்கும் வகையில் செயல்படவேண்டும்.
தமிழ்நாடு காடுவளர்ப்பு திட்டத்தின் கீழ் வன பொருட்களினால் விற்பனை மூலம் கிடைக்க பெறும் வருவயை சம்மந்தப்பட்ட கிராம வனக்குழு கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் வனம் சார வன விளைப்பொருட்கள் சம்மந்தப்பட்ட கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் புளி மற்றும் இதர மகசூல் மூலம் கிடைத்து வரும் வருவாயில் 75 சதவிகிதம் கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கும், 25 சதவிகிதம் கிராம வனக்குழுவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. சிறு வன மகசூல் மூலம் கிடைக்கும் வருவாயை மழை வாழ் மக்கள் சங்க கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளத்தில் மொத்தம். ரூ. 1கோடியே 40 லட்சத்து 57 ஆயிரத்து 994 மதிப்பில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 75 சதவிகித தொகை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்குட்பட் ஓசூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் உரிகம் ஆகிய 7 வனசரகங்களுக்கு உட்பட்ட மழைவாழ் மக்களுக்கு குடும்ப வளர்ச்சி பணிகளாகிய விவசாயம் செய்தல், கால் நடை வாங்குதல், மருத்துவ செலவு மேற்கொள்ளுதல், குழந்தைகளை படிக்க வைத்தல், வீடுகள் கட்டுதல் மற்றும் பராமரிப்பு செய்தல் போன்ற அத்தியாவசிய பணிகள் செய்துக்கொள்ள 80 கிராமங்களில் 2103 மழைவாழ் குடும்பங்களுக்கு தலா ரூ. 700 முதல் ரூ. 50 ஆயிரம் வரைமொத்;தம் 95 லட்சத்து 6 ஆயிரத்து 900 நிதி இன்று மட்டும் வழங்கப்படுகிறது. இந்ந நிதியினை பெற்று தங்கள் வாழ்வாதரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என பயன்படுத்;தி வனத்துறை அமைச்சர் திண்டுகல் சி.சீனிவாசன் உரையாற்றினார். முன்னதாக மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டபணிகள், விழிப்புணர்வு பணிகள் மற்றும் தடுப்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கத்தை, வனத்துறை அமைச்சர்; மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ஆகியோர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கோவிந்தராஜ், முதன்மை தலைமை வன பாதுகாவலர் பசவராஜ் இ.வ.ப., தலைமை வன பாதுகாவலர் சுதான்ஷா குப்தா இ.வ.ப. நிர்வாகம் மற்றும் நிதி, தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமை பாதுகாப்பு திட்ட இயக்குநர் உலகநாதன் இ.வ.ப., வன பாதுகாப்பு அலுவலர் வேணுபிரசாந்த் இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, ஓசூர் வன பாதுகாவலர் ராஜேந்திரன், அரூர் வன கோட்ட பாதுகாவலர் செல்வி.செண்பகபிரியா, செல்வி, பிரியதஷ்ஷினி, தருமபுரி மாவட்ட வன பாதுகாவலர் க.திருமால், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.தென்னரசு, கிருஷ்ணகிரி நகர் மன்ற முன்னாள் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் மது (எ) ஹேம்நாத், தருமபுரி மத்திய கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், வன சரகர்கள் சுகுமார், ஆறுமுகம், தனபால், முருகேசன். நாகேஷ் வட்டாட்சியர்கள்; ராமகிருஷ்ணன், பூசன் குமார், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.