முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர கூட்டுறவு வங்கிபேரவை கூட்டம்: வருகிற 15ந் தேதி மாலை நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      வேலூர்

அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கியின் பேரவை கூட்டம் வருகிற 15ந் தேதி மாலை நேரத்தில் நடக்க இருப்பதாக தெரிய வந்தள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரின் மைய பகுதியில் நகர கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் அமைந்து உள்ளது. இந்த தலைமை அலுவலகத்தின் நிர்வாகத்தின் கீழ் அரக்கோணம் நகரில் கூடுதலாக இரு கிளைகளுடன்;; பல்வேறு கிராம புறங்களில் பல கிளைகளுடன் வெற்றிகரமாக வங்கி; செயல்பட்டு வருகிறது

 

பேரவை கூட்டம்

 

பேரவை கூட்டம் குறித்து நகர கூட்டுறவு வங்கி துணைபதிலாளா,; தலைவர், பொதுசெயலாளர், சார்பில் வெளியிட்ட பத்திரிகை செய்தியில் கூறியிருந்ததாவது. பேரவை கூட்ட அறிவிப்பு. வங்கியின் பேரவை கூட்டம் வருகிற 2017ஆம் ஆண்டு மே 15ந் தேதி மாலை நடைபெற இருக்கிறது. அதில் கீழே கண்ட பொருள்கள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளது. அப்பொழுது அ வகுப்பு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள். ஆலோசனை பொருள்களின் சிலவற்றை மட்டும் பின் வருமாறு காணலாம்.

நெ1. 28008 முல் 30008 முடிய சேர்க்கப்பட்ட அ வகுப்பு உறுப்பினர்களை அங்கீகாரம் செய்வது தொடர்பாக நெ2. வங்கி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மிகைப்பணி ஊதியம் ஏற்பது தொடர்பாக. நெ3. பணியாளர்களின் பணிநிலை குறித்த சிறப்பு ஒழுங்கு முறை விதிகளை ஒடடு மொத்தமாக திருத்தம் செய்தல் தொடர்பாக பரிசீலனை செய்தல். நெ4. வங்கி செயல் இயக்குனராக மோகன்ரங்கசாமி நியமித்ததை அனுமதி வழங்குதல் தொடர்பாக. நெ5. 2017-18 வருடத்திற்கு புதிதாக பட்டயக் கணக்கு தணிக்கையாளர் ஒருவரை நியமித்தல் தொடர்பாக.

நெ6. வங்கி மூலம் வழங்கும் அனைத்து வகைக் கடன்களுக்கான வட்டி விகிதம் மற்றும் வைப்பு கணக்கிற்கு வழங்கும் வட்டி விகிதம் மாற்றி அமைத்ததை அனுமதி தொடர்பாக. நெ7.வங்கி தலைமையகம் கிளைகளின் வேலை நாட்கள். வேலை நேரத்தை ரிசர்வ் வங்கி அறிவுரைபடி மாற்றி அமைத்தல் தொடர்பாக. நெ8. கடன்கள் மற்றும் வைப்புகள் குறித்த திட்டம் உருவாக்குதல் தொடர்பாக. இவ்வாறு பேரவை கூட்டம் குறித்து நகர கூட்டுறவு வங்கி வெளியிட்ட பத்திரிகை செய்தியில் கூறியிருந்தது.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்