முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை வசந்த உற்சவம் நிறைவு தி.மலை ஐயங்குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி

திங்கட்கிழமை, 8 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலையில் சித்திரை வசந்த உற்சவ நிறைவு விழாவையட்டி தி.மலை ஐயங்குளத்தில் நேற்று அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உற்சவ நிறைவு விழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை உற்சவம் கடந்த 28ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவந்தது. விழாவையட்டி நாள்தோறும் அண்ணாமலையார் உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது. இரவில சுவாமிக்கு மண்டகபடி நடைபெற்றது.

இவ்விழாவின் நிறைவாக நேற்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் திருவண்ணாமலையிலுள்ள ஐயங்குளத்தில் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து நேற்றிரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகபடி நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் அண்ணாமலையார் கோவிலில் 3ம் பிரகாரம் தங்க கொடி மரம் முன்பு மன்மத தகனமும் நடைபெற்றது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்