முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் அபார வெற்றி: இமானுவேல் மக்ரானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

திங்கட்கிழமை, 8 மே 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் இமானுவேல் மக்ரானுக்கு பிரதமர் மோடி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல்
பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். இந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.

மக்ரான் வெற்றி
இதில் மக்ரான் 66 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெரீனை வீழ்த்தினார். மக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த மெரீன் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டார். வெற்றிபெற்ற மக்ரானை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய மெரீன், வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என தெரிவித்தார்.

மோடி வாழ்த்து
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்ரானுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள இமானுவேல் மக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் நீங்கள் அடைந்துள்ள மகத்தான வெற்றிக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா-பிரான்ஸ் இடையிலான நல்லுறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்