முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன் சுவாமி தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      தூத்துக்குடி

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்தார்.

அமைச்சர் சாமி தரிசனம்

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்றுமுன்தினம் இரவு திருச்செந்தூர் வந்தார். இங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர், நேற்றுகாலையில் கோயிலுக்கு சென்றார். அமைச்சருக்கு உள்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கோயிலுக்குள் அமைச்சர் செங்கோட்டையன் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்படும் போது பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் என்ற கூறி மாணவ, மாணவிகளை அழைப்பது குறித்து நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது: கோடை விடுமுறையில் ஸ்பெஷல் வகுப்பு குறித்து என்னிடம் இதுவரை புகார் வரவில்லை. உரிய ஆதாரத்தோடு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். அமைச்சருடன் கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், நகர செயலாளர் மகேந்திரன் மற்றும் திரளான கட்சிகள் வந்திருந்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்