எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் ஸ்ரீ ரங்கபூபதி கல்வி நிறுவனங்கள் சார்பாக, செஞ்சி ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமினை கலெக்டர் .இல.சுப்பிரமணியன், தொடங்கி வைத்து, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
3137 நபர்கள் பங்கேற்பு
இம்முகாமில், படித்த மற்றும் படிக்காத கிராமப்புறங்களைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ள, 8-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, இளங்கலை மற்றும் முதுகலை போன்ற கல்வித்தகுதி பெற்ற ஆண், பெண் இருபாலரும் என 3137 நபர்கள் கலந்து கொண்டனர்.
70 தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு
இதில் 70 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. தனியார் நிறுவனங்கள் நடத்திய நேர்முகத் தேர்வில் 953 நபர்கள் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு பெற்றனர். தேர்ச்சிபெற்ற அனைவருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் .இல.சுப்பிரமணியன், பணி நியமன ஆணையினை வழங்கி விழாப் பேருரையாற்றினார் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு பலதரப்பட்ட திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து பணி அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறத்தை சேர்ந்த படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு பல்வேறு தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து அந்நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற்று தரும் நோக்கத்தோடு இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த தமிழக முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாமில் 22,000 நபர்கள் கலந்து கொண்டு 7,000 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் வழங்கினார்.
தேடி அழைக்கும்
மாணவ, மாணவிகள் தங்கள் அறிவுத்திறமைகளை படிக்கும்பொழுதே வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்லூரி படிப்பு உலகில் என்ன நடக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளவும், உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவும் ஏதுவாக அமைகிறது. உங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டால், தனியார் நிறுவனங்கள் உங்களை தேடி அழைத்துக் கொள்ளும். தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் திகழ்ந்தாலும், அதிக அளவில் கல்லூரி படிப்பு படிக்கும் மாணவ மாணவிகள் இம்மாவட்டத்தில் உள்ளனர் என்பதை கூறிக்கொள்வதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இவர்கள் அனைவரும் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொண்டு, வேலைவாய்ப்பினை பெற்று, சமுதாயத்தில் நல்ல நிலையை அடைய வேண்டுமென வாழ்த்துகிறேன் என கலெக்டர் .இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.
பலர் பங்கேற்பு
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், மாவட்ட திட்ட இயக்குநர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) சுந்தரராஜன், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான், ஸ்ரீ ரங்கபூபதி கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஸ்ரீபதி, தலைவர் ரங்கபூபதி, உதவி திட்ட அலுவலர் கமல்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.