முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் ரூ.4.26 கோடி மதிப்பில் மேற்பார்வை பொறியாளர் புதிய அலுவலக கட்டிட கட்டுமான பணிகள்: கலெக்டர் சி.கதிரவன் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 10 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்தில், தமிழ்நாடு மின்சார வாரியம் , 110,33-11 முஏ துணை மின் நிலையம் வளாகத்தில், ரூ.4.26 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கிருஷ்ணகிரி, மேற்பார்வை பொறியாளர் புதிய அலுவலகம் கட்டுவதற்கு கலெக்டர் சி. கதிரவன் , தலைமையில் பூமி பூஜை செய்து பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இப்பணிகளை கொடுக்கப்பட்டுள்ள கால வரையறுக்குள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கலெக்டர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

கலந்து கொண்டோர்

இந்நிகழ்ச்சியில் மின்வாரிய வேலூர் மண்டல பொறியாளர், அப்துல் இரகிம், மேற்பார்வை பொறியாளர்கள் மு. நந்த கோபால், சின்ன தம்பி, செயற்பொறியாளர் (பொது) ஆஞ்சாசகாயமேரி, செயற்பொறியாளர் ( கட்டிடம்) நிரஞ்சனா, ஓசூர் கோட்ட செயற்பொறியாளர் குமார், கிருஷ்ணகிரி கோட்ட செயற்பொறியாளர் கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சம்பத், முத்துசாமி, கந்தசாமி, ரவி, கோபால்சாமி, மற்றும் வாரிய அலுவலர்கள் , பணியாளர்கள், கட்டிட ஒப்பந்தகாரர். சு. பெரியசாமி அருண் குமார் மற்றும் பொறியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மோகனசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சேகர், ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்