எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டம், மேலகுப்பம் கிராமத்தில் உள்ள திம்மனாச்சாரிகுப்பம் ஏரி மற்றும் நந்தியாலம் கிராமத்தில் உள்ள நந்தியாலம் ஏரிகளில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை கலெக்டர் சி.அ.ராமன், பார்வையிட்டு பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பணிகள்
வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், மேலகுப்பம் கிராமத்தில் உள்ள திம்மனாச்சாரிகுப்பம் ஏரியினை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் திம்மனாச்சாரிகுப்பம் ஏரியின் கரை மற்றும் 20.44 ஹெக்டேர் நீர்பிடிப்பு பரப்பில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றுதல், ஏரியின் கரை 976 மீ பலப்படுத்துதல், வரத்துக்கால்வாயில் 3000 மீட்டர் முதல் 5500 மீட்;டர் வரை தூர் வாரி செப்பனிடுதல், ஏரியின் நீர் பிடிப்பு பகுதியின் எல்லைகற்கள் நடுதல் மேலும் கலங்களில் ஏப்ரான்களின் உள்ள சேதங்களை சீர் செய்தும், தடுப்பு சுவர் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 47.43 ஹெக்டர் பாசன அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அதே போன்று வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், நந்தியாலம் கிராமத்தில் உள்ள நந்தியாலம் ஏரியினை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.இத்திட்டத்தின் கீழ் நந்தியாலம் ஏரியின் கரை, மற்றும் 78.685 ஹெக்டேர் நீர்பிடிப்பு பரப்பில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றுதல், ஏரியின் கரை 1312 மீ நீளத்திற்கு பலப்படுத்துதல், வரத்துக்கால்வாயில் டுளு 2700 மீ முதல் டுளு 4500 மீ வரை தூர் வாரி செப்பனிடுதல், ஏரியின் நீர் பிடிப்பு பகுதியின் எல்லைகற்கள் நடுதல் மேலும் கலங்களில் ஏப்ரான்களின் உள்ள சேதங்களை சீர்செய்தும், தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 147.37 ஹெக்டர் பாசன அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்று நீர்வள ஆதாரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு அவர்கள் கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார்.
கலெக்டர் பேட்டி
இந்த செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அவற்றை மேம்படுத்தும் உயரிய நோக்கத்தோடு மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் வழக்காட்டுதலின்படி கடந்த 2016-17 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புகளோடு இணைந்து அவர்களின் பங்களிப்போடு நீர்நிலைகளை புனரமைத்து, விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும்.
இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக 21.01.2017ன் வாயிலாக நடப்பாண்டில் (2016-17) தமிழகம் முழுவதும் இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.100.00 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 34 ஏரிகளை புனரமைக்க ரூ.300.00 இலட்சத்திற்கு அனுமதி வழங்கப்ட்டு அனைத்து பணிகளும் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் 34 ஏரிகளிலும ஏரிக்கரை மற்றும் நீர்பரப்பு பகுதிகளில் காணப்படும் புதர்களை அகற்றுதல், ஏரிக்கரையில் அரிப்பினால் ஏற்பட்டுள்ள பள்ளங்களை நிரப்பி கரையினை பலப்படுத்துதல், அனைத்து ஏரிகளில் நீர்வரத்து கால்வாய் மொத்தம் 16 கிலோமீட்டர் தூரம் தூர்வாருதல் மற்றும் புதர்களை அகற்றுதல, எல்லைக்கற்கள் நடுதல் போன்ற புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.குடிமராமத்து திட்டத்தின் மூலம் 2016-17 ஆம் நிதியாண்டில் வேலூர் மாவட்டத்தில் 34 ஏரிகள் புனரமைப்பு செய்யப்படுவதினால் மொத்தம் பாசனம் பெறும் 2248 ஹெக்டேர் நிலங்கள் பாசன உறுதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் உணவு உற்பத்தி மற்றும் இந்த ஏரிகளின் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை அரக்கோணம் பையனூர் ஏரியில் குடிமராமத்து பணிகள் நிறைவடைந்துள்ளது. மற்ற அனைத்து ஏரிகளின் குடிமராமத்து புனரமைப்பு பணிகளும் வரும் ஜீன் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும்
மேலும் வரும் 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.300.00 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் இரண்டாவது கட்டமாக இத்திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 55 ஏரிகள் ரூ.10.00 கோடியில் புனரமைப்பு செய்யப்படுவதினால் பாசனம் பெறும் 5187 ஹெக்டர் நிலங்கள் பாசன உறுதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நீர் இல்லாத ஏரிகள் பொதுப்பணித்துறையினால் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு இலவசமாக அனுமதி வழங்க தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏரிகளில் இருந்து வண்டல் மண் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் இயந்திரங்களை கொண்டு சேகரிக்கப்பட்டு 1 யூனிட் மண் ரூ.35.2 ற்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனால் 1 ஹெக்டர் நன்செய் நிலம் வைத்துள்ள விவசாயிகள் 12.5 லோடு வண்டல் மண்ணும் 1 ஹெக்டர் புன்செய் நிலம் வைத்துள்ள விவசாயிகள் 15.5 லோடு வண்டல் மண்ணும் எடுத்துக் கொள்ளலாம். இவை நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் சி.அ.ராமன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் செயற் பொறியாளர் அன்பரசு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.இளங்கோ, கோட்டப் பொறியாளர் கார்த்திக், இளநிலை பொறியாளர் ராகவேந்திரன், வட்டாட்சியர் ப்ரியா மற்றும் அலுவலர்கள், செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க