முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 இந்தியர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      இந்தியா
Image Unavailable

நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் கொண்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் ஆண்டுதோறும் மே மாதத்தில் இந்த சிகரத்தில் ஏறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 11-ம் தேதி திபெத்தின் வடபகுதி வழியாக எவரெஸ்ட் செல்லும் பாதை திறக்கப்பட்டது.

அன்று தங்களது பயணத்தைத் தொடங்கிய 6 இந்தியர்கள் நேற்று காலையில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். சுரேஷ் பாபு, துர்கா ராவ் குஞ்சா, பரத் தம்மினெனி, கிருஷ்ணா ராவ் வூயகா, சத்ய ராவ் கரே மற்றும் நாகராஜு சுந்தரனா ஆகிய 6 பேரும் நேபாளத்தைச் சேர்ந்த 10 வழிகாட்டிகளுடன் சென்று இந்த சாதனையை படைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்