முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.டி.வி. தினகரனை விடுதலை செய்யக் கோரி பாளையில் பொதுக்கூட்டம் நாஞ்சில் சம்பத் பங்கேற்பு

திங்கட்கிழமை, 15 மே 2017      திருநெல்வேலி

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலர் டி.டி.வி. தினகரனை விடுதலை செய்யக் கோரி, அக்கட்சி சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 பலர் பங்கேற்பு

பொதுக்கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட முன்னாள் இளைஞரணி துணைத் தலைவர் எஸ்.டி. சாமி தலைமை தாங்கினார் ,கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநிலச் செயலாளர்  புகழேந்தி, நடிகர் குண்டு கல்யாணம், அமைப்புச்செயலாளர் நிறைகுளத்தான், பேச்சாளர் ஆர்.எஸ்.கே. துரை, வி.கே.பி. துரை, தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா, இந்திய தேசிய லீக் செயலர் தலைவர் காஜா நிஜாமுத்தீன், மறுமலர்ச்சி தமுமுக மாநில பொதுச்செயலர் கே.எஸ். ரசூல்மைதீன், காமராஜர் ஆதித்தனார் கழகத் தலைவர் சிலம்பு சுரேஷ், ராஜ்ஜிய மள்ளர் கட்சி நிறுவனர் எம்.சி. கார்த்திக், இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் உடையார், தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் நெல்லை எஸ். மகாலிங்கம், அகில இந்திய முக்குலத்தோர் நலச்சங்கத் தலைவர் ஏ. பவானி வேல்முருகன், முன்னாள் துணைமேயர் பூ. ஜெகநாதன், கட்சியின் மானூர் தெற்கு ஒன்றியச் செயலர் கல்லூர் இ. வேலாயுதம், அக்ரோ சேர்மன் அ. மகபூப்ஜான், இளம்பெண்கள் பாசறை துணைச் செயலர் கல்லூர் பி. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்