முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ.5.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 15 மே 2017      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய குடும்ப அட்டைகள் வேண்டியும், அங்கன்வாடி பணியாளர் பணியிடம் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 342 மனுக்கள் வரப்பெற்றன.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் 6 நபர்களின் குடும்பத்தாருக்கு திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் சார்பில் தலா ரூ.1.00 இலட்சம் வீதம் 5 நபர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5.00 இலட்சம் மற்றும் 1 நபரின் குடும்பத்தாருக்கு ரூ.50,000-ம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3,355 வீதம் ரூ.16,775 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.4,650 வீதம் ரூ.9,300 மதிப்பிலான விலையில்லா சலவைப்பெட்டிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். மேலும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1500 வீதம் ரூ.4,500 மதிப்பிலான காதொலிக்கருவிகளையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.5,800 மதிப்பிலான சக்கர நாற்காலியினையும், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையினையும் என மொத்தம் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொத்தம் 32 பயனாளிகளுக்கு ரூ.5,86,375 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் டி.கே.ராஜேஸ்வரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கே.எஸ்.முரளி கிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் எஸ்.அசோகன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் க.சுப்பிரமணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்