முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலுக்கு வருவது பற்றி ரசிகர்கள் கூட்டத்தில் ரஜினி பேச்சு

திங்கட்கிழமை, 15 மே 2017      சினிமா
Image Unavailable

சென்னை : அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்கள் கூட்டத்தில் வெளியிட்டார். ‘ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கை இருக்கிறது. நான் ஒரு கருவி. நடிகனாகத்தான் ஆண்டவன் இந்த நிமிடம் வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று அவர் கூறினார்.

ரசிகர்களுடன் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சென்னையில் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இம்மாதம் 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை ரஜினி சந்தித்தார். முதல்நாளில் மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் மொத்தம் 750 பேர் ரஜினியை சந்தித்து தனித் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ‘க்யூஆர்’ கோடுடன் கூடிய விசேஷ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே ரஜினியோடு புகைப்படம் எடுக்க மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட்டார்கள். அடையாள அட்டை இல்லாதவர்கள் சென்னைக்கு வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகாலையிலேயே மண்டபத்துக்கு அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் அனைவரும் மண்டபத்தின் உள்ளே இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.சரியாக 9 மணிக்கு ரஜினி மேடைக்கு வந்தார். அவரை கண்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவருடன் டைரக்டர் எஸ்.பி. முத்துராமனும் வந்திருந்தார். முதலில் எஸ்.பி. முத்துராமன் பேசினார். ரஜினியை வைத்து 25 படங்களை நான் இயக்கி இருக்கிறேன். புகழை தலையில் வைத்துக் கொள்ளாதவர் ரஜினி. கேமராவுக்கு பின்னால் ரஜினி என்றுமே நடித்ததில்லை’ என முத்துராமன் கூறினார். எஸ்.பி.முத்துராமன் பேசியதற்கு பின்பு ரஜினிகாந்த் பேசினார்.

அவர் பேசியதாவது:-

தண்ணீருக்குள் காலை வைக்கிறோம். காலை வைத்தவுடன் தான் தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் எல்லாம் இருக்கிறது என்று. காலை பின்னால் எடுக்கவில்லை என்றால் பிரச்சினையாகி விடும். முரட்டு தைரியம் எல்லாம் இருக்கக் கூடாது. பேசுகிறவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். நான் ஒவ்வொரு தேர்தல் வரும் போதும், என்னுடைய ஆதரவு யாருக்குமில்லை என்ற சூழலுக்கு தள்ளப்படுகிறேன். அனைவருமே என்னுடைய ஆதரவுக்காக காத்திருப்பதில்லை.

பணம் சம்பாதிக்க நினைப்பது தவறு

என்னுடைய பெயரை வைத்து யாரும் ஆதாயம் தேடிவிடக் கூடாது என்பதற்காகத் தான் சொல்கிறேன். பல ரசிகர்கள் எனக்கு நிறைய கடிதங்கள் எல்லாம் எழுதியுள்ளார்கள். நாமும் படம் பார்த்துக் கொண்டு இப்படியே இருந்தால் எப்படி?, நாம் எப்போது முன்னேறுவது, நமக்கு முன்னால் வந்தவர்கள் எல்லாம் இன்னோவா வண்டியில் போகிறார்கள். கவுன்சிலர் ஆகிறார்கள், எம்.எல்.ஏ ஆகிறார்கள், மந்திரி ஆகிறார்கள். நாம் எப்போது அப்படி ஆவது, பணம் சம்பாதிப்பது என்று சில ரசிகர்கள் கேட்கிறார்கள், பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுக்கிறார்கள். அது தப்பில்லை. கவுன்சிலர் ஆகலாம், மந்திரி ஆகலாம் என்ற ஆசையிருப்பதில் தவறில்லை. ஆனால், அதை வைத்து பணம் சம்பாதிப்பது என்று நினைப்பது தவறு. அவர்கள் சொல்வதைக் காணும் போது வருத்தப்படுவதா, கோபப்படுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.

ஆண்டவன் கையில் நான் ஒரு கருவி

நான் அப்போதும் சொல்கிறேன், இப்போதும் சொல்கிறேன். ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கையுள்ளது. இந்த உடம்பை நான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இதயத்தை தூயமையாக வைத்திருக்க வேண்டும். அந்த ஆண்டவனிடம் நான் ஒரு கருவி. அவர் என்னை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது நடிகனாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். நடிகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்கு என்னவாக பயன்படுத்திகிறனோ அப்படி இருப்பேன். அவன் என்னவாக பயன்படுத்தினாலும் அதில் நியாயமா, உண்மையா, தர்மமா, மனசாட்சியோடு பணிபுரிவேன்.

இப்போது நடிகனாக எனது கடமையை செய்து கொண்டிருக்கிறேன். மக்களை மகிழ்விக்கிறேன். அதே மாதிரி என்ன பொறுப்புக் கொடுத்தால் கூட நியாயமா, உண்மையா, சத்தியமாகச் செய்வேன். அது என்ன என்பது எனக்கு தெரியாது. கடவுளுக்குத் தான் தெரியும். நீங்கள் ஒரு கெட்ட காரியம் செய்யும் போது, மனசாட்சி செய்ய வேண்டாம் என்று சொல்லும். அதை மீறி தான் நாம் செய்கிறோம். ஒரு வேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் கிட்டக்கூட சேர்க்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago