எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் நேற்று ரசிகர்கள் கூட்டத்தில் வெளியிட்டார். ‘ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கை இருக்கிறது. நான் ஒரு கருவி. நடிகனாகத்தான் ஆண்டவன் இந்த நிமிடம் வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் என்று அவர் கூறினார்.
ரசிகர்களுடன் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சென்னையில் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இம்மாதம் 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த ரசிகர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதில் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை ரஜினி சந்தித்தார். முதல்நாளில் மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் மொத்தம் 750 பேர் ரஜினியை சந்தித்து தனித் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ‘க்யூஆர்’ கோடுடன் கூடிய விசேஷ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே ரஜினியோடு புகைப்படம் எடுக்க மண்டபத்தினுள் அனுமதிக்கப்பட்டார்கள். அடையாள அட்டை இல்லாதவர்கள் சென்னைக்கு வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகாலையிலேயே மண்டபத்துக்கு அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் அனைவரும் மண்டபத்தின் உள்ளே இருக்கையில் அமர வைக்கப்பட்டனர்.சரியாக 9 மணிக்கு ரஜினி மேடைக்கு வந்தார். அவரை கண்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவருடன் டைரக்டர் எஸ்.பி. முத்துராமனும் வந்திருந்தார். முதலில் எஸ்.பி. முத்துராமன் பேசினார். ரஜினியை வைத்து 25 படங்களை நான் இயக்கி இருக்கிறேன். புகழை தலையில் வைத்துக் கொள்ளாதவர் ரஜினி. கேமராவுக்கு பின்னால் ரஜினி என்றுமே நடித்ததில்லை’ என முத்துராமன் கூறினார். எஸ்.பி.முத்துராமன் பேசியதற்கு பின்பு ரஜினிகாந்த் பேசினார்.
அவர் பேசியதாவது:-
தண்ணீருக்குள் காலை வைக்கிறோம். காலை வைத்தவுடன் தான் தெரிகிறது உள்ளே நிறைய முதலைகள் எல்லாம் இருக்கிறது என்று. காலை பின்னால் எடுக்கவில்லை என்றால் பிரச்சினையாகி விடும். முரட்டு தைரியம் எல்லாம் இருக்கக் கூடாது. பேசுகிறவர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். நான் ஒவ்வொரு தேர்தல் வரும் போதும், என்னுடைய ஆதரவு யாருக்குமில்லை என்ற சூழலுக்கு தள்ளப்படுகிறேன். அனைவருமே என்னுடைய ஆதரவுக்காக காத்திருப்பதில்லை.
பணம் சம்பாதிக்க நினைப்பது தவறு
என்னுடைய பெயரை வைத்து யாரும் ஆதாயம் தேடிவிடக் கூடாது என்பதற்காகத் தான் சொல்கிறேன். பல ரசிகர்கள் எனக்கு நிறைய கடிதங்கள் எல்லாம் எழுதியுள்ளார்கள். நாமும் படம் பார்த்துக் கொண்டு இப்படியே இருந்தால் எப்படி?, நாம் எப்போது முன்னேறுவது, நமக்கு முன்னால் வந்தவர்கள் எல்லாம் இன்னோவா வண்டியில் போகிறார்கள். கவுன்சிலர் ஆகிறார்கள், எம்.எல்.ஏ ஆகிறார்கள், மந்திரி ஆகிறார்கள். நாம் எப்போது அப்படி ஆவது, பணம் சம்பாதிப்பது என்று சில ரசிகர்கள் கேட்கிறார்கள், பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுக்கிறார்கள். அது தப்பில்லை. கவுன்சிலர் ஆகலாம், மந்திரி ஆகலாம் என்ற ஆசையிருப்பதில் தவறில்லை. ஆனால், அதை வைத்து பணம் சம்பாதிப்பது என்று நினைப்பது தவறு. அவர்கள் சொல்வதைக் காணும் போது வருத்தப்படுவதா, கோபப்படுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.
ஆண்டவன் கையில் நான் ஒரு கருவி
நான் அப்போதும் சொல்கிறேன், இப்போதும் சொல்கிறேன். ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கையுள்ளது. இந்த உடம்பை நான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இதயத்தை தூயமையாக வைத்திருக்க வேண்டும். அந்த ஆண்டவனிடம் நான் ஒரு கருவி. அவர் என்னை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்போது நடிகனாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். நடிகனாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்கு என்னவாக பயன்படுத்திகிறனோ அப்படி இருப்பேன். அவன் என்னவாக பயன்படுத்தினாலும் அதில் நியாயமா, உண்மையா, தர்மமா, மனசாட்சியோடு பணிபுரிவேன்.
இப்போது நடிகனாக எனது கடமையை செய்து கொண்டிருக்கிறேன். மக்களை மகிழ்விக்கிறேன். அதே மாதிரி என்ன பொறுப்புக் கொடுத்தால் கூட நியாயமா, உண்மையா, சத்தியமாகச் செய்வேன். அது என்ன என்பது எனக்கு தெரியாது. கடவுளுக்குத் தான் தெரியும். நீங்கள் ஒரு கெட்ட காரியம் செய்யும் போது, மனசாட்சி செய்ய வேண்டாம் என்று சொல்லும். அதை மீறி தான் நாம் செய்கிறோம். ஒரு வேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் கிட்டக்கூட சேர்க்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
நடத்தை விதிமீறல் புகார்: வரும் 29-ம் தேதி பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புது டெல்லி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் வரும் 29-ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.