முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மாவட்ட மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 212 மனுக்கள் பெறப்பட்டது : கலெக்டர் கணேஷ் தகவல்

திங்கட்கிழமை, 15 மே 2017      புதுக்கோட்டை
Image Unavailable

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் தலைமையில் நேற்று (15.05.2017) நடைபெற்றது.

 கோரிக்கை மனுக்கள்

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கூறியதாவது.பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா கோரி 12 மனுக்களும், பட்டா மாறுதல் கோரி 15 மனுக்களும், புதிய குடும்ப அட்டை கோரி 08 மனுக்களும், காவல்துறை நடவடிக்கைக்காக 11 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 12 மனுக்களும், பசுமைவீடுசாலைவசதிகுடிநீர்வசதி கோரி 37 மனுக்களும், கல்வி உதவித்தொகை கோரி 03 மனுக்களும, முதியோர் மாற்றுத்திறனாளிவிதவை உதவித்தொகை கோரி 16 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாகவும் 22 மனுக்களும், இதர கோரிக்கை 76 மனுக்களும் என மொத்தம் 212 மனுக்கள் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி, தனித்துணை கலெக்டர் (.பா.தி) செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்