முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளில் வங்காள மொழி பயிற்றுவிப்பதைக் கட்டாயம் ஆக்கியது மேற்குவங்க அரசு

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : பள்ளிகளில் வங்காள மொழி கற்பித்தலைக் கட்டாயம் ஆக்கி மேற்குவங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆங்கில வழியில் கல்வி கற்ப்பிக்கும் பள்ளிகளில்கூட இது கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்குவங்க மாநில அரசின் கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இது தொடர்பான அறிவிப்பை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கூறியதாவது ,

 "மேற்குவங்க மாநில கல்வித் துறைக்கு உட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் வங்காள மொழி கற்பிப்பது கட்டாயமாக்கப்படுகிறது. ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கும் பள்ளிகளிலும்கூட இது பொருந்தும். முதல் வகுப்பிலிருந்தே வங்காளம் கற்பிக்கப்பட வேண்டும். மாணவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வங்காள மொழியை இரண்டாம் அல்லது மூன்றாம் விருப்பப்பாடமாக எடுத்துப் படிக்கலாம்" என்றார்.  மேற்குவங்க பள்ளிகளில் இதுவரை வங்காள மொழியை கட்டாயமாக மூன்று விருப்பப் பாடங்களில் ஒன்றாக கற்பிக்கும் முறை இல்லை. இந்நிலையில், தற்போது அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசு அவசரச் சட்டம்

அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள மாநிலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் கற்பித்தல் கட்டாயமாக்கப்பட்டது. இதற்காக அம்மாநில அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியது.  தற்போது, மேற்குவங்கத்தில் மம்தா தலைமையிலான அரசும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முடிவை எடுத்துள்ளது.

முன்னதாக மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சி நடந்தபோது அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பது படிப்படியாக குறைக்கப்பட்டது. ஆனால், 2003-ல் அனைத்து வகுப்புகளிலும் ஆங்கிகலம் கற்பித்தல் மீண்டும் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்