எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்ட கோப்பு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்ததும் அடுத்த மாதமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக வந்த அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
பேருந்து இயக்கம் குறித்து
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்றுமதியம் திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் வந்தார். இங்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்சிற்காக காத்திருந்த பயணிகளிடம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து கேட்டார். பின்னர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் அந்தந்த ஊர்களுக்கு உடனடியாக பஸ்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதே போல் அரசு பஸ் டிரைவர்களிடம் நேரில் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:
பேச்சு வார்த்தை
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்ததால் பிரச்சனைகள் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்ச பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முதற்கட்டமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ.750 கோடி வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.
1250 கோடி
அதே போல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொழிலாளர்ளின் பிரச்சனையை தெரிவித்ததும் மேலும் ரூ.500 கோடி சேர்ந்து ரூ.1250 கோடி வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சங்கத்தினர் பிடிவாதமாக ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரச போதிய நிதியை வழங்க முன்வந்தும் போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் பொதமக்கள் பாதிக்காத வகையில் அரசு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
70 சதவீத பஸ்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 313 வழித்தடங்களில், 212 வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தூத்துக்குடியில் நான், கலெக்டருடன் சென்று ஆயவு நடத்தினேன். அதே போல் திருச்செந்தூரில் மொத்தமுள்ள 47 வழித்தடங்களில் 41 வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 70 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. நாளைக்குள்(இன்று) அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படும். இதில் அனுபவமுள்ள டிரைவர், கண்டக்டர்களை தேர்வு செய்து தான் பஸ்களை இயக்கி வருகிறோம். இதுவரை எதுவும் அசம்பாவிதங்கள் இல்லை.
திட்டத்திற்கு அனுமதி
தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியில் ராமநாதபுரம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் தொடர்பாக மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இத்திட்ட கோப்புகளை மத்திய அரசு அனுமதிக்காக னுப்பிவைத்துள்ளோம்.. இதன்படி திருச்செந்தூர் அருகே ஆலந்தலை பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படயுள்ளது. இதன்மூலம் 100 எம்.எல்.டி. கடல்நீர் குடிநீராக்க மாற்றப்பட்டு வினியோகம் செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டத்திற்கே 70 எம்.எல்.டி குடிநீரே தேவைப்படுகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதும் அடுத்த மாதமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளது.
ரூ.5 கோடியில் புது பஸ் ஸ்டாண்டு
திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிக்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணி நடக்கும் போது அனைத்து தரப்பு வணிகர்கள், பொதுமக்கள் கருத்துக்கள் கேட்டு அதன்பின்னரே திட்டம் செயல்படுத்தபடும். கோவில்பட்டியில் ரூ.5 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் போது அனைத்து தரப்பினர் கருத்துக்களை கேட்ட பின்னரே திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதே போல திருச்செந்தூரிலும் அனைத்து தரப்பினரும் கருத்துகளை அறிந்த திட்டம் நடைமுறைக்கும் வரும். அதே போல் திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதி நேர மோட்டார் வாகன அலுவலகம் தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்வோம்
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சி நல்ல முறையில் நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கே 123 எம்.எல்.ஏ.க்களின் முழு ஆதரவு உள்ளது. எங்களிடம் பிரிந்து சென்றவர்கள் ஒரு அணிதான். அவர்கள் எப்போது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் நாங்கள் உள்ளோம். வருவது அந்த அணியில் உள்ளவர்களின் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பலர் பங்கேற்பு
அமைச்சருடன் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., அம்மா அணி செயலாளர் செல்லப்பாண்டியன், ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ், உடன்குடி ஆயிஷா கல்லாசி, திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், முன்னாள் கவுன்சிலர் வடிவேலு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட துணை மேலாளர் பழனியாண்டி, திருச்செந்தூர் கிளை மேலாளர் பாஸ்கரன், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வின் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.