எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்ட கோப்பு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு அனுமதி கிடைத்ததும் அடுத்த மாதமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக வந்த அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
பேருந்து இயக்கம் குறித்து
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்றுமதியம் திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் வந்தார். இங்கு அரசு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து நேரில் ஆய்வு செய்தார். அப்போது பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்சிற்காக காத்திருந்த பயணிகளிடம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து கேட்டார். பின்னர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் அந்தந்த ஊர்களுக்கு உடனடியாக பஸ்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதே போல் அரசு பஸ் டிரைவர்களிடம் நேரில் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:
பேச்சு வார்த்தை
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்ததால் பிரச்சனைகள் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்ச பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முதற்கட்டமாக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ.750 கோடி வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.
1250 கோடி
அதே போல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தொழிலாளர்ளின் பிரச்சனையை தெரிவித்ததும் மேலும் ரூ.500 கோடி சேர்ந்து ரூ.1250 கோடி வழங்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சங்கத்தினர் பிடிவாதமாக ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரச போதிய நிதியை வழங்க முன்வந்தும் போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் பொதமக்கள் பாதிக்காத வகையில் அரசு பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
70 சதவீத பஸ்கள் இயக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 313 வழித்தடங்களில், 212 வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தூத்துக்குடியில் நான், கலெக்டருடன் சென்று ஆயவு நடத்தினேன். அதே போல் திருச்செந்தூரில் மொத்தமுள்ள 47 வழித்தடங்களில் 41 வழித்தடங்களில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 70 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. நாளைக்குள்(இன்று) அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படும். இதில் அனுபவமுள்ள டிரைவர், கண்டக்டர்களை தேர்வு செய்து தான் பஸ்களை இயக்கி வருகிறோம். இதுவரை எதுவும் அசம்பாவிதங்கள் இல்லை.
திட்டத்திற்கு அனுமதி
தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியில் ராமநாதபுரம், திருச்செந்தூர் ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் தொடர்பாக மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இத்திட்ட கோப்புகளை மத்திய அரசு அனுமதிக்காக னுப்பிவைத்துள்ளோம்.. இதன்படி திருச்செந்தூர் அருகே ஆலந்தலை பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படயுள்ளது. இதன்மூலம் 100 எம்.எல்.டி. கடல்நீர் குடிநீராக்க மாற்றப்பட்டு வினியோகம் செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டத்திற்கே 70 எம்.எல்.டி குடிநீரே தேவைப்படுகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதும் அடுத்த மாதமே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளது.
ரூ.5 கோடியில் புது பஸ் ஸ்டாண்டு
திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிக்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணி நடக்கும் போது அனைத்து தரப்பு வணிகர்கள், பொதுமக்கள் கருத்துக்கள் கேட்டு அதன்பின்னரே திட்டம் செயல்படுத்தபடும். கோவில்பட்டியில் ரூ.5 கோடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் போது அனைத்து தரப்பினர் கருத்துக்களை கேட்ட பின்னரே திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதே போல திருச்செந்தூரிலும் அனைத்து தரப்பினரும் கருத்துகளை அறிந்த திட்டம் நடைமுறைக்கும் வரும். அதே போல் திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதி நேர மோட்டார் வாகன அலுவலகம் தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்வோம்
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சி நல்ல முறையில் நடந்து வருகிறது. இந்த ஆட்சிக்கே 123 எம்.எல்.ஏ.க்களின் முழு ஆதரவு உள்ளது. எங்களிடம் பிரிந்து சென்றவர்கள் ஒரு அணிதான். அவர்கள் எப்போது வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தான் நாங்கள் உள்ளோம். வருவது அந்த அணியில் உள்ளவர்களின் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பலர் பங்கேற்பு
அமைச்சருடன் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., அம்மா அணி செயலாளர் செல்லப்பாண்டியன், ஓட்டபிடாரம் எம்.எல்.ஏ., சுந்தர்ராஜ், உடன்குடி ஆயிஷா கல்லாசி, திருச்செந்தூர் நகர செயலாளர் மகேந்திரன், முன்னாள் கவுன்சிலர் வடிவேலு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட துணை மேலாளர் பழனியாண்டி, திருச்செந்தூர் கிளை மேலாளர் பாஸ்கரன், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வின் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.