முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுப்பாளையம் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க 19.5லட்சம் நிதிஒதுக்கீடு: பன்னீர்செல்வம் எம்எல்எ அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

செங்கம் தாலுக்கா புதுப்பாளையம் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க பழைய கிணறு அடிவெட்டு 4சிறு மின்விசை பம்புடன் மினிடேங்க் அமைத்தல் போன்ற குடிநீர் அத்தியாவசிய பணிகளுக்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.19.5லட்சம் நிதியினை தொகுதிஎம்எல்எ பன்னீர்செல்வம் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு

புதுப்பாளையம் பேரூராட்சியில் ஒத்தவடை விதியில் ரூ.1லட்சத்து 20ஆயிரம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட மின்மோட்டாருடன் கூடிய சின்டெக் ஆழத்துளை கிணறு குடிநீர் டேங்கை பன்னீர்செல்வம் எம்எல்எ இயக்கிவைத்தார். தொடர்ந்து பேரூராட்சியில் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க கிணறுகள் ஆழ்துளை கிணறுகள் மினிடேங்குகள் போன்றவற்றை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார் பின்னர் கிணறு அடிவெட்டு செய்யவும் 4சிறுமின்விசை பம்பு அமைக்கவும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.19.5லட்சம் ஒதுக்கீடுசெய்வதாகவும் உரிய பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவித்தார். அவருடன் முன்னாள் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் நைணாகண்ணு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் புருஷோத்தமன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் துரை வழக்கறிஞர் ராதா அரசு ஒப்பந்ததாரர் பச்சையப்பன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்