எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் இரண்டாவது நாள் வேலை நிறுத்தத்தையொட்டி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி பேருந்துகளில் பயணம் செய்வதற்கு ஏதுவாக போதுமான பேருந்துகள் உள்ளனவா என்பது குறித்தும், சரியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்தும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று (16.05.2017) காலை 7.00 மணிக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் திருப்பத்தூர் பேருந்து பணிமனைக்கு சென்று, பேருந்துகளின் இயக்கம், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் வருகை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் படிப்படியாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளை மேலாளர் தெரிவித்தார். பின்னர் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு ஆம்பூர் போக்குவரத்து வாகன பணிமனைக்கு சென்று பேருந்து இயக்கம் குறித்து கேட்டறிந்து பேருந்துகள் முழுமையாக இயக்க ஓட்டுநர்கள் நியமித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசின் சார்பில் தேவையான உதவிகள் உடனுக்குடன் செய்யப்படும் என்று அமைச்சர் அலுவலரிடம் தெரிவித்தார்.
ஆலோசனை
பின்னர் வேலூர் பேருந்து நிலையத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பயணிகளிடம் அரசு தற்போது மேற்கொண்டுள்ள வசதி தங்களுக்கு போதுமானதாக உள்ளதா எனவும், எந்தெந்த பகுதிகளுக்கு பேருந்துகளில் இயக்கம் தேவைப்படுகிறது எனவும் கேட்டறிந்து அங்குள்ள பொது மேலாளர், வணிக மேலாளர் ஆகியோரிடம் தக்க ஆலோசனைகள் வழங்கினார். மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆசியோடு மக்களின் தேவைகளுக்காக செயல்படும் அரசு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்களின் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் தற்காலிகமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் எந்தவொரு பயமில்லாமல் பேருந்துகளை இயக்கி பொதுமக்களுக்கு உதவிடவேண்டும் என்றும் பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டால் உடனடியாக அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் தைரியமாக பேருந்துகளை இயக்க அரசும் மாவட்ட நிர்வாகமும் அனைத்து பாதுகாப்புகளையும் எடுத்துள்ளது. எனவே நீங்கள் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கவேண்டும் ன்று ஓட்டுநர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்விற்கு பின் செய்தியாளர்களிடம் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்ததாவது:-தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நேற்றும் இன்றும் நடந்து வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் அரசு போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு உத்திரவாதமும் வழங்கிய போதும் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் அன்றாட பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். கலெக்டர் , போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறையினரின் அறிவுரை மற்றும் பாதுகாப்போடு பேருந்துகள் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று 60 சதவிகிதமும், இன்று 70 சதவிகிதமும் மற்றும் நாளை முழுமையாகவும் இயக்க தக்க நடவடிக்கைகள் எடுக்க உத்திரவிட்டுள்ளேன். மேலும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்கள் தற்காலிக பணி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட்டு வாகனங்களை பாதுகாப்பாக இயக்கி வருகின்றனர். இன்று 100-க்கும் அதிகமானோர் பேருந்துகளை இயக்க தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும். தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. மேலும் தென்மாவட்டங்களுக்கு வேலூரில் இருந்து பேருந்துகள் கூடுதலாக இயக்கவும் போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்திரவிட்டுள்ளேன். எனவே பொதுமக்கள் தங்கள் பயணங்களை தைரியமாக மேற்கொள்ளலாம் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், இ.கா.ப., திருப்பத்தூர் சார் கலெக்டர் மரு.கார்த்திகேயன், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி (ஆம்பூர்), வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், தமிழ்நாடு போக்குவரத்து பொது மேலாளர் ரமேஷ், வணிக மேலாளர் தசரதன், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், வட்டாட்சியர் ஸ்ரீராம், ஆவின் பெருந்தலைவர் வேலழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ரமேஷ், கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர்கள் செல்வம், மதியழகள், மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.