எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 452 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில், தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் ரூ.2கோடியே 21லட்சத்து 66ஆயிரத்து 815 மதிப்பில் 452 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பேசியதாவது:- இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற கோட்பாட்டினை கொள்கையாக கொண்டு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். அவர்கள் காட்டிய வழியினை பின்பற்றி செயல்படும் தமிழ்நாடு அரசு ஜெயலலிதா செயல்படுத்திய அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் தொடர்ந்து சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு விலையில்லா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு எண்ணற்ற பெண்கள் பயனடைந்துள்ளனர். 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது பெண்களின் திருமணத்திற்கு வழங்கப்படும் விலையில்லா 4 கிராம் தங்கத்தினை 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் நடைபெறும் இவ்விழாவில் சமூக நலத்துறையின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 302 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 82லட்சத்து 25ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை மற்றும் விலையில்லா 8 கிராம் தங்கம் உட்பட, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் மொத்தம் 452 பயனாளிகளுக்கு ரூ.2கோடியே 21லட்சத்து 66ஆயிரத்து 815 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தினை ஊக்கப்படுத்தும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா மடிக்கணினிகள் உட்பட 14 வகையான மாணவர் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பான திட்டங்களின் மூலமாகவும், மாணவ, மாணவியர்களின் கடின உழைப்பாலும், ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டுதலின் மூலமாகவும், 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், மாணவ, மாணவியர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 96.77 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. இதற்காக கடுமையாக உழைத்த மாவட்ட கலெக்டர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல தற்போது நிலவி வரும் வறட்சியான சூழ்நிலையில் பொதுமக்களின் குடிநீர்; தேவையினை பூர்த்தி செய்வதற்காக கூடுதல் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் ரூ.17.19 கோடி மதிப்பில் மொத்தம் 1,140 குடிநீர் பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அவற்றில் 85 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுதவிர மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஊரணிகள் மற்றும் நீர்;வரத்து கால்வாய்கள் ஆகியவற்றை தூர்வாரி எதிர்வரும் மழைக்காலத்தில் அதிகளவில் குடிநீர் சேமிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி அமைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நலனை மேம்படுத்திடும் விதமாக தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் சமூக நலத்துறையின் மூலம் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு விலையில்லா 4 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2016-2017 நிதியாண்டில் 4,381 பயனாளிகளுக்கு ரூ.19.90 கோடி மதிப்பில் விலையில்லா 4 கிராம் தங்கம் (மொத்தம் 17.524 கிலோ கிராம்) மற்றும் திருமண நிதியுதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1,345 பெண் குழந்தைகளுக்கு ரூ.3.35 கோடி மதிப்பில் வைப்புத் தொகை ரசீது வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் 104 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 வயதிற்குட்பட்ட 56 பெண் குழந்தைகளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இன்றைய தினம் நடைபெறும் இவ்விழாவில் தமிழ்நாடு அரசின் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 452 பயனாளிகளுக்கு ரூ.2.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். இவ்விழாவில் மாவட்ட சமூகநல அலுவலர் சி.குணசேகரி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வ.முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட கலெக்;டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) உமா மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேல் உட்பட அரசு அலுவலர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.