எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : மும்பை அணியை வீழ்த்தி ஐ.பி.எல் முதல் பிளே ஆப் போட்டியில் வெற்றி பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
முதலில் பேட் செய்த புனே அணி மனோஜ் திவாரி தோனி ஆகியோரது அபாரமான ஆட்டத்தினால் 162 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது. இதனையடுத்து மும்பை அணிக்கு இன்னொரு பிளே ஆப் வாய்ப்பு உள்ளது. அதில் வென்றால் மீண்டும் புனே அணியை இறுதியில் சந்திக்கலாம். கடைசி 2 ஓவர்களில் தோனி அதிரடியினால் 41 ரன்களை விளாசியது புனே சூப்பர் ஜெயண்ட்ஸ், இதுவே மும்பை தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
நடுவர் பிழையால் ரோஹித் சர்மா அவுட்
கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து ஸ்பின் பந்து வீச்சில் ஆட்டமிழப்பது வாடிக்கையாகியுள்ளது. ஆனால் ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று லெந்த்தை தவறாகக் கணித்து ஸ்வீப் ஆடினார், ஆனால் பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு சென்றது. புனே அணி, வாஷிங்டன் சுந்தர் அப்பீல் செய்ய நடுவர் கையை உயர்த்தினார், தவறான தீர்ப்பு மும்பையின் தோல்விக்கு இட்டுச் சென்றுள்ளது என்றால் மிகையாகாது.
ஆனால், பார்த்திவ் படேல் அருமையாக ஆடி வந்த போது, ஸ்கோரும் இலக்கை எட்டுவதற்கு இணங்கவே சென்று கொண்டிருந்த போது இத்தகைய தருணத்தில் ரோஹித் சர்மாவின் ஷாட் தேர்வு கடும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆனால் பொதுவாகவே ஐபிஎல் கிரிக்கெட்டில் சில ஷாட் தேர்வுகள், சில மோசமான பந்துவீச்சுகள், சில மோசமான களவியூகங்கள் பற்றி சந்தேகங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இம்முறை இன்சைடு எட்ஜில் ரோஹித் சர்மா அவுட் கொடுக்கப்பட்டாலும், அந்தத் தருணத்தில் அத்தகைய ஷாட் தேர்வு ஏன் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
ரோஹித்திற்கு நடுவரின் மோசமான தீர்ப்பினால் இவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் அம்பாத்தி ராயுடு ரன் எடுக்காமல் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இன்னொரு முக்கியத் திருப்பமாக வாஷிங்டன் சுந்தர், கெய்ரன் பொலார்டை வீழ்த்தினார். அதன் பிறகு மும்பையின் வாய்ப்பு பற்றி பேச ஒன்றுமில்லை. 162 ரன்களை புனே அணி மிகவும் சவுகரியமாகவே வெற்றியாக மாற்றிக் கொண்டது என்றே கூற வேண்டும்.
குட் லெந்த்தையும் தாண்டிய ஃபுல் லெந்த் பந்துகளை ஸ்டம்புக்கு நேராக வீசிய வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சு பிட்சின் மந்தமான தன்மையினால் ஆடுவதற்கு மேலும் கடினமாக அமைந்தது. மேலும் அவர் பந்துகள் சற்றே வேகம் கூடுதலாக அமைந்ததால் பேட்ஸ்மென்கள் தூக்கி அடிக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் 4 ஓவர்களில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
ரஹானே, திவாரி, தோனி அபாரம்
மும்பையினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட புனே அணிக்கு வழக்கமான தொடக்கம் கிடைக்கவில்லை. ராகுல் திரிபாதி ரன் எடுக்காமல் பிளிக் ஆட முயன்று மெக்லெனகன் பந்தில் பவுல்டு ஆனார். மலிங்கா பந்தில் முன் விளிம்பில் பட ஹர்திக் பாண்டியா கேட்ச் பிடிக்க 1 ரன்னில் வெளியேறினார் ஸ்மித். அதன் பிறகு ரன் வருவது மிகவும் கடினமாக அமைந்தது. 10 பந்துகளில் 3 ரன்கள் என்று புனே அணி திணறியது. ஆனால் ரஹானே, திவாரி விக்கெட்டுகளை விடாமல் பொறுப்புடன் நிதானமாகவும் அதே வேளையில் பந்தை அடிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அடித்தும் ஆடினர். கரண் சர்மா, குருணால் பாண்டியாவை அடிப்பது மிகக் கடினமாக அமைந்தது.
ரஹானே திணறினாலும் 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுக்க, திவாரியும், ரஹானேயும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 80 ரன்களைச் சேர்த்த போது ரஹானே கரண் சர்மாவிடம் எல்.பி. ஆகி வெளியேறினார். 12.4 ஓவர்களில் 89/3 என்று இருந்தது. அதன் பிறகு தோனி இறங்கினார். முதலில் ஒரு அபாரமான சிக்சரை அடித்தார், ஆனால் அதன் பிறகு ரன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. 18 ஓவர்கள் முடிவில் 121/3 என்று இருந்தது.
19-வது ஓவரில் மெக்லெனகன் பந்துகளை மனோஜ் திவாரி, தோனி பதம் பார்த்தனர், முதலில் பீமர் நோ-பால் பவுண்டரி ஆனது. இது திவாரியின் அரைசதமாகவும் அமைந்தது. பிறகு நேராக ஒரு சிக்சர். சிங்கிள் எடுத்து தோனியிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுக்க தோனி கிரீசிற்குள் நன்றாக உள்ளே நின்ற படி மிட்விக்கெட் மீது ஒரே தூக்கு தூக்கினார் பந்து சிக்ஸ். அதன் பிறகு 2 வைடுகள், பிறகு கடைசி பந்தில் தோனி மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க இந்த ஓவரில் 26 ரன்கள் விளாசல். 3 ஓவர்களில் 20 ரன்கள் என்றிருந்த மெக்லனகன் கடைசியில் 4 ஓவர்களில் 46 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
20-வது ஓவரில் பும்ரா வீச தோனி பும்ராவுக்கு எதிராக தன் முதல் சிக்சரை விளாசினார். மீண்டும் நேராக ஒரு சிக்ஸ். கடைசி பந்தில் திவாரி ரன் அவுட் ஆனார். கடைசி 2 ஓவர்களில் 41 ரன்கள் வர புனே அணி 162 ரன்கள் எடுத்தது. மனோஜ் திவாரி 48 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 58 ரன்களை எடுக்க, தோனி 26 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இந்தப் பிட்சில் அது தடுக்கக் கூடிய ஸ்கோர் அல்ல என்றாலும் புனே அணி அபார வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் லெண்டில் சிம்மன்ஸ் 5 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பார்த்திவ் படேல் அற்புதமாக ஆடினார். முதலில் வாஷிங்டன் சுந்தரை மிட்விக்கெட்டில் சிக்ஸ் தூக்கினார். உனட்கட் வீசிய மார்புயர பவுன்சரை டீப் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸ் அடித்தார். பெர்குசனை லெக் திசையில் அடித்த சிக்ஸ் ஆடம் கில்கிறிஸ்டின் துல்லியத்தை நினைவூட்டியது. பார்த்திவ் படேல் 40 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து 7-வது விக்கெட்டாக ஸ்கோர் 103 ஆக இருந்த போது வெளியேறினார். மெக்லெனகன், குருணால் பாண்டியாவை தாக்குர் வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா 1 பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்களில் வெளியேறினார். கடைசியில் பும்ரா 11 ரன்கள் எடுக்க மலிங்கா 7 ரன்கள் எடுக்க 20 ஒவர்களில் 142/9 என்று மும்பை முடிந்தது. ஆட்ட நாயகன் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், தாக்குர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: