எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹக் : இந்திய முன்னாள் கப்பல்படை அதிகாரி குல்புஷன் யாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை நிறுத்திவைக்கும்படி பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய கப்பல் படையில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி குல்புஷன் ஜாதவ்,(46) வியாபாரம் தொடர்பாக ஈரானுக்கு சென்றிருந்தார். அங்கு இவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி பாகிஸ்தான் உளவு பிரிவினர் கடத்திக்கொண்டு பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டனர்.
ஜாதவ் மீது பொய் வழக்கு
அதோடு மட்டுமல்லாது ஜாதவ் மீது உளவு பார்த்ததாகவும் நாசவேலைக்கு சதி செய்ததாகவும் பாகிஸ்தான் தனது ராணுவ கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சரியாக விசாரிக்காத பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு, ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை விதித்தது.
இந்தியா கடும் எதிர்ப்பு
ஜாதவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஜாதவுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஜாதவ் விவகாரத்திற்கு தூதரக ரீதியாக தீர்வுகாண இந்தியா 30-க்கும் மேற்பட்ட முறை முயற்சி செய்தது. இதை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது.
சர்வதேச கோர்ட்டில் வழக்கு
இதையடுத்து, ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி நெதர்லாந்து நாட்டில் ஹக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் கடந்த 8-ம் தேதி இந்தியா வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணையின்போது இந்திய தரப்பில் பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை பாகிஸ்தான் விதித்திருப்பது கடந்த 1977-ம் ஆண்டு வியன்னா மாநாட்டில் நடந்த ஒப்பந்தத்திற்கு எதிரானது என்றும் ஈரானுக்கு வியாபாரம் சம்பந்தமாக ஜாதவ் சென்றிருந்தார் என்றும் அவரை பாகிஸ்தான் உளவுப்பிரிவினர் கடத்திக்கொண்டு சென்றுவிட்டனர் என்றும் ஹரீஷ் வாதாடினார்.
30 முறை முயற்சி
தூதரக ரீதியாக பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா 30 முறை முயற்சி செய்தும் அதை பாகிஸ்தான் நிராகரித்துவிட்டது என்றும் தீர்ப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஜாதவுக்கு பாகிஸ்தான் தூக்குத்தண்டனையை நிறைவேற்றிவிடும் என்றும் ஹரீஷ் கேட்டுக்கொண்டார். பாகிஸ்தான் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜாதவ் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் நாசவேலை மற்றும் உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் உளவு பார்த்த விவகாரம் தூதரக ரீதியாக வராது என்றும் கூறினார்.
ஆனால் இந்தியா கேட்டுக்கொண்டபடி சர்வதேச கோர்ட்டு முதலில் ஜாதவுக்கு தூக்குத்தண்டனையை கடந்த 9-ம் தேதி சஸ்பெண்ட் செய்தது. பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் சர்வதேச கோர்ட்டு அறிவித்தது. அதன்படி நேற்று பிற்பகல் சர்வதேச நேரப்படி மாலை 3 மணி அளவில் சர்வதேச கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு
அந்த தீர்ப்பில் ஜாதவுக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கிய பெஞ்சில் 11 நீதிபதிகள் இருந்தனர். இந்த 11 நீதிபதிகளும் ஒரு மித்த கருத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளனர். உண்மையிலேயே இது இந்தியா தரப்பில் நீதி உள்ளது என்பதை காட்டுகிறது.
ஜாதவ் விவகாரத்தில் இந்தியா தூதரக ரீதியாக தொடர்புகொண்டதை வியன்னா மாநாடு ஒப்பந்தப்படி பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஜாதவ் கைது விவகாரம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்றும் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி ரோன்னி ஆப்ரஹாம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.