எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் 94.4 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 8 ம் தேதி முதல் 30 ம் ம் தேதிவரை நடைபெற்றது. இந்த தேர்வினை 10,லட்சத்து 25,ஆயிரத்து 909 பேர் எழுதுவதற்காக பதிவு செய்திருந்தனர். இதில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 226 மாணவிகளும், 4 லட்சத்து 90 ஆயிரத்து 870 மாணவர்களும் ஒரு மூன்றாம் பாலினத்தவரும் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அப்போது மாணவர்களின் மதிப்பெண் அட்டவணை பட்டியல் அனைத்து பள்ளிகளில் ஒட்டப்பட்டதுடன், மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 0.8 சதவீதம் கூடுதலாகும். மாணவியர்கள் 96.2 சதவீதமும், மாணவர்கள் 92.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 3.7 சதவீதம் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனைப்படைத்துள்ளனர். தேர்வு எழுதிய மூன்றாம் பாலினித்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியை 5,059 பள்ளிகள் பெற்றுள்ளன. இவற்றில் 2,232 மேல்நிலைப் பள்ளிகளும், 2,827 உயர்நிலைப் பள்ளிகளும் ஆகும்.
அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய 5,463 அரசு பள்ளிகளில் , 2,637 மேல்நிலைப் பள்ளிகளும், 2,826 உயர்நிலைப் பள்ளிகளும் ஆகும். அவற்றில் 100 சதவீதம் தேர்ச்சியை 1,557 அரசுப் பள்ளிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளன. அதில் 385 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், 1,172 அரசு உயர்நிலைப் பள்ளிகளும் ஆகும்.
இத்தேர்வில் 481 மதிப்பெண்களுக்கு மேல் 38,613 மாணவர்கள் பெற்று 3.93 சதவீதமும், 451 முதல் 480 மதிப்பெண்களும் 1,22,757 மாணவர்கள் பெற்று 12.50 சதவீதமும், 426 முதல் 450 மதிப்பெண் வரை 1,13,831 மாணவர்கள் பெற்று 11.59 சதவீதமும், 401 முதல் 425 மதிப்பெண்கள் வரை 1,11,266 மாணவர்கள் பெற்று 11.33 சதவீதமும், 301 முதல் 400 மதிப்பெண்கள் வரை 3,66,948 மாணவர்கள் பெற்று 37.36 சதவீதமும், 201 முதல் 300 மதிப்பெண்கள் வரை 1,92,336 மாணவர்கள் பெற்று 19.58 சதவீதமும், 176 முதல் 200 மதிப்பெண் வரை 15,942 மாணவர்கள் பெற்று 1.62 சதவீதமும், 175 மதிப்பெண்களுக்கு கீழ் 20,404 மாணவர்கள் பெற்று 2.08 சதவீதமும் பெற்றுள்ளனர்.
10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 50 பேர் உட்பட மொழிப்பாடத்தில் 69 பேரும், கணக்கு பாடத்தில் 13,759 பேரும், அறிவியல் பாடத்தில் 17,481 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 61,115 பேரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால் ஆங்கிலப்பாடத்தில் ஒருவரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெறவில்லை.
அதேபோல் பாடவாரியாக தேர்வு எழுதிய மாணவர்களில் மொழிப்பாடத்தில் 9,50,206 மாணவர்களில் 96.75 சதவீதமும், ஆங்கிலம் பாடத்தில் தேர்வு எழுதிய 9,59,245 மாணவர்களில் 97.67 சதவீதமும், கணக்கு பாடத்தில் தேர்வு எழுதிய 9,48,402 மாணவர்களில் 96.57 சதவீதமும், அறிவியல் பாடத்தில் தேர்வு எழுதிய 9,77,258 மாணவர்களில் 99.51 சதவீதமும், சமூக அறிவியியல் பாடத்தில் தேர்வு எழுதிய 9,66,155 மாணவர்களில் 98.38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் 98.55 சதவீதம் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தையும், கடலூர் மாவட்டம் 88.74 சதவீதம் கடைசி இடத்தையும் பெற்றுள்ளது. அதேபோல் அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை 104 பள்ளி பெற்று முதலிடத்தையும், சென்னை மாவட்டத்தில் 3 பள்ளிகள் மட்டும் 100 சதவீதம் பெற்று கடைசி இடத்தையும பெற்றுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அரசுத் தேர்வுத்துறையின் மூலம் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்.மூலம் 9,54,995 மாணவர்களுக்கு சென்றுள்ளது.
10 ம் வகுப்பு மாணவர்கள் 25 ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் , தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அன்றே பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.