எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேச்சு. அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையில் ஆயுள்கால உறுப்பினர்களுக்கான புரவலர் திட்டத்தினை அபிராமி குருப்ஸ் சேர்மன் அபிராமி ராமநாதன் தொடங்கி வைத்து ஏழை குடும்பத்தின் பிள்ளைகள் உயர்கல்வி கற்க அறக்கட்டளை மூலமாக 911 பேருக்கு ரூ.58 லட்சம் கல்வி உதவி தொகையாக வழங்கினார். மேல்நிலைக்கல்வி (+2) முடித்து குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக உயர்கல்வியில் சேர முடியாதவர்களை நிதி உதவி வழங்கி ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்த்துவிட விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதனை தலைவராக கொண்டு 2012 ம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் அனைவருக்கு உயர்கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலமாக மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் மற்றும் அறக்கட்டளை புரவலர் சேர்ப்பு தொடக்க விழா வேலூரில் உள்ள ரங்காலயா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை அறக்கடடளை உறுப்பினர் மயிலாம்பிகை குமரகுரு வரவேற்றார்.
கல்வியின் பெருமை
அறக்கட்டளை பணிகள் பற்றி பொருளாளர் கே.ஜவுரிலால், புலவர் பதுமனார், நிதிக்குழு தலைவர் டார்லிங் வெங்டசுப்பு ஆகியோர் விளக்கி கூறினார்கள். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவரும் விஐடி பல்கலைக் கழகத்தின் வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது: 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் உள்ள மலைவாழ் குடும்ப பிள்ளைகள் என கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,890 பேர் ரூ.3.16 கோடி கல்வி உதவி பெற்று தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இதில் மாணவிகள் 66 சதவிதம் ஆவார்கள். இவர்களில் 78 சதவிதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவார்கள். பெண்கள் கல்வி பயின்றால் சமுதாயம் மேம்படும் குடும்பம் மேம்படும் எனவே பெண்களுக்கு கல்வி வழங்குவது அவசியம். நமது முன்னோர்கள் முதற்கொண்டு கல்வியின் பெருமைகளை பற்றி கூறி வருகின்றனர். இந்தியநாடு இளைஞர்களை கொண்டநாடு 127 கோடி ஜனத்தொகை கொண்ட நம்நாட்டில் 50 சதவிதம் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களை முழுமையாக நாம் பயன்படுத்தினால் உலகையே நம்மால் வெல்ல முடியும் அதற்கு கல்வி முக்கியம் அதுவும் தரமான உயர்கல்வி அவசியம். நம்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி எல்லாவற்றையும் நம்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி கூடாது என்பதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தை கொண்டுவந்துள்ளார். அதனை எப்படி செய்ய முடியும் என்றால் ஆராய்ச்சி கல்வி அதற்கு உதவியாக இருக்கும். நாட்டில்30 சதவிதம் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது. இவர்களை மேலே கொண்டுவர வேண்டும். நாட்டில் உயர்கல்வி படிக்க தகுதியுள்ள14 கோடி பேர்களில்3.50 கோடி பேர்க்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது.நாட்டில்700 பல்கலைக்கழகங்கள் 40,000 கல்லூரிகள் இருந்தும் அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதில்லை. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகளைமத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். உயர்கல்வி ஒரு சிலருக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கிறது மற்றவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் அதை மாற்றதான் இந்த அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை.
மனிதனுக்கு உணவு
கல்வி என்பது மனிதனை முழு மனிதனாக மாற்றும் திறன் படைத்தது.ஒழுக்கம் கட்டுபாடு கற்றுதருவது. அத்தகைய கல்வி குறிப்பாக உயர்கல்விக்கான வாய்ப்பு உள்ள அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த அறக்கட்டளை மூலம் பயன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது அதனால் அதிக நிதி தேவைபடுகிறது இதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் நிதி உதவி செய்ய வேண்டும் அறக்கட்டளைக்கு ஐந்தாயிரத்துக்கு மேல் நிதிவழங்கி புரவலராக சேரலாம் என்று பேசினார். நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல துணைப் பொது மேலாளர் ஏ.புவனேஸ்வரி கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: மனிதனுக்கு உணவு கொடுப்பதை விடகல்வி கொடுப்பது உயர்வானது என்று கூறுவார்கள் அதன்படி படிக்க தகுதியிருந்தும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அந்த வாய்ப்பு பெற முடியாதவர்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கி தரும் பணியை இந்த அறக்கட்டளை செய்து வருவது பாராட்டுக்குறியது. பாரத ஸ்டேட் வங்கி சமுதாய நலனுக்கான பணிகளை செய்து வருகிறது. அதன்படி இந்த அறக்கட்டளைக்கு தேவையான உதவியை பாரத ஸ்டேட் வங்கி மூலம் கிடைக்க ஆவன செய்யப்படும் என்றார். நிகழ்ச்சியில் சென்னை அபிராமி மெகா மால் சேர்மன் ரொட்டேரியன் அபிராமி ராமநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் புரவலராக சேரும் திட்டத்தினை தொடங்கி வைத்து அறக்கட்டளை மூலமாக 911 மாணவ மாணவியர் உயர்கல்வி பயில கல்வி உதவி நிதியாக ரூ.58 லட்சம் வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை டிரஸ்டிகள் முனைவர் ஜெயகரன் ஐசக் முன்னாள் எம்எல்ஏ லிங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர். இதில் 40 க்கும் மேற்பட்டோர் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் நிதி வழங்கி அறக்கட்டளை புரவலர்களாக பதிவு செய்தனர். முடிவில் அறக்கட்டளை திட்ட அலுவலர் முத்துவீரன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.