எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேச்சு. அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையில் ஆயுள்கால உறுப்பினர்களுக்கான புரவலர் திட்டத்தினை அபிராமி குருப்ஸ் சேர்மன் அபிராமி ராமநாதன் தொடங்கி வைத்து ஏழை குடும்பத்தின் பிள்ளைகள் உயர்கல்வி கற்க அறக்கட்டளை மூலமாக 911 பேருக்கு ரூ.58 லட்சம் கல்வி உதவி தொகையாக வழங்கினார். மேல்நிலைக்கல்வி (+2) முடித்து குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக உயர்கல்வியில் சேர முடியாதவர்களை நிதி உதவி வழங்கி ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்த்துவிட விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதனை தலைவராக கொண்டு 2012 ம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் அனைவருக்கு உயர்கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை மூலமாக மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் மற்றும் அறக்கட்டளை புரவலர் சேர்ப்பு தொடக்க விழா வேலூரில் உள்ள ரங்காலயா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை அறக்கடடளை உறுப்பினர் மயிலாம்பிகை குமரகுரு வரவேற்றார்.
கல்வியின் பெருமை
அறக்கட்டளை பணிகள் பற்றி பொருளாளர் கே.ஜவுரிலால், புலவர் பதுமனார், நிதிக்குழு தலைவர் டார்லிங் வெங்டசுப்பு ஆகியோர் விளக்கி கூறினார்கள். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவரும் விஐடி பல்கலைக் கழகத்தின் வேந்தருமான டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது: 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில் உள்ள மலைவாழ் குடும்ப பிள்ளைகள் என கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,890 பேர் ரூ.3.16 கோடி கல்வி உதவி பெற்று தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இதில் மாணவிகள் 66 சதவிதம் ஆவார்கள். இவர்களில் 78 சதவிதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவார்கள். பெண்கள் கல்வி பயின்றால் சமுதாயம் மேம்படும் குடும்பம் மேம்படும் எனவே பெண்களுக்கு கல்வி வழங்குவது அவசியம். நமது முன்னோர்கள் முதற்கொண்டு கல்வியின் பெருமைகளை பற்றி கூறி வருகின்றனர். இந்தியநாடு இளைஞர்களை கொண்டநாடு 127 கோடி ஜனத்தொகை கொண்ட நம்நாட்டில் 50 சதவிதம் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இவர்களை முழுமையாக நாம் பயன்படுத்தினால் உலகையே நம்மால் வெல்ல முடியும் அதற்கு கல்வி முக்கியம் அதுவும் தரமான உயர்கல்வி அவசியம். நம்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி எல்லாவற்றையும் நம்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி கூடாது என்பதற்காக மேக் இன் இந்தியா திட்டத்தை கொண்டுவந்துள்ளார். அதனை எப்படி செய்ய முடியும் என்றால் ஆராய்ச்சி கல்வி அதற்கு உதவியாக இருக்கும். நாட்டில்30 சதவிதம் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளதாக ஆய்வு தெரிவிக்கின்றது. இவர்களை மேலே கொண்டுவர வேண்டும். நாட்டில் உயர்கல்வி படிக்க தகுதியுள்ள14 கோடி பேர்களில்3.50 கோடி பேர்க்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது.நாட்டில்700 பல்கலைக்கழகங்கள் 40,000 கல்லூரிகள் இருந்தும் அனைவருக்கும் உயர்கல்வி கிடைப்பதில்லை. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகளைமத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். உயர்கல்வி ஒரு சிலருக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கிறது மற்றவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் அதை மாற்றதான் இந்த அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை.
மனிதனுக்கு உணவு
கல்வி என்பது மனிதனை முழு மனிதனாக மாற்றும் திறன் படைத்தது.ஒழுக்கம் கட்டுபாடு கற்றுதருவது. அத்தகைய கல்வி குறிப்பாக உயர்கல்விக்கான வாய்ப்பு உள்ள அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த அறக்கட்டளை மூலம் பயன் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது அதனால் அதிக நிதி தேவைபடுகிறது இதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் நிதி உதவி செய்ய வேண்டும் அறக்கட்டளைக்கு ஐந்தாயிரத்துக்கு மேல் நிதிவழங்கி புரவலராக சேரலாம் என்று பேசினார். நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல துணைப் பொது மேலாளர் ஏ.புவனேஸ்வரி கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: மனிதனுக்கு உணவு கொடுப்பதை விடகல்வி கொடுப்பது உயர்வானது என்று கூறுவார்கள் அதன்படி படிக்க தகுதியிருந்தும் பொருளாதார சூழ்நிலை காரணமாக அந்த வாய்ப்பு பெற முடியாதவர்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கி தரும் பணியை இந்த அறக்கட்டளை செய்து வருவது பாராட்டுக்குறியது. பாரத ஸ்டேட் வங்கி சமுதாய நலனுக்கான பணிகளை செய்து வருகிறது. அதன்படி இந்த அறக்கட்டளைக்கு தேவையான உதவியை பாரத ஸ்டேட் வங்கி மூலம் கிடைக்க ஆவன செய்யப்படும் என்றார். நிகழ்ச்சியில் சென்னை அபிராமி மெகா மால் சேர்மன் ரொட்டேரியன் அபிராமி ராமநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் புரவலராக சேரும் திட்டத்தினை தொடங்கி வைத்து அறக்கட்டளை மூலமாக 911 மாணவ மாணவியர் உயர்கல்வி பயில கல்வி உதவி நிதியாக ரூ.58 லட்சம் வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை டிரஸ்டிகள் முனைவர் ஜெயகரன் ஐசக் முன்னாள் எம்எல்ஏ லிங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர். இதில் 40 க்கும் மேற்பட்டோர் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் நிதி வழங்கி அறக்கட்டளை புரவலர்களாக பதிவு செய்தனர். முடிவில் அறக்கட்டளை திட்ட அலுவலர் முத்துவீரன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.