முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை வளர்த்தவர் அம்மா ஒருவர்தான்: ஊட்டி விழாவில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      தமிழகம்
Image Unavailable

ஊட்டி, என்னை வளர்த்தவர் அம்மா ஒருவர்தான் என்று ஊட்டி மலர் கண்காட்சி விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

மலர் கண்காட்சி

ஊட்டியில் நேற்று 121-வது மலர் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். பிறகு அரசு தாவரவியல் பூங்காவில் மலர்களை அவர் பார்வையிட்டார். விழாவில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். பிறகு அவர் விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

நேற்றைய தினம் ஒருவர் குறிப்பிட்டதாக பத்திரிகையிலே செய்தி ஒன்றை காலையில் பார்த்தேன். ஒருவரால் நான் பார்த்து வளர்க்கப்பட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள், அதுதவறு. புரட்சித்தலைவி அம்மா என்ற தெய்வத்தால் நான் வளர்க்கப்பட்டவன். 1974ல் பொதுவாழ்க்கையில் நான் ஈடுபட்டேன். அப்போது அ.தி.மு.க.வில் என்னைநான் இணைத்துக் கொண்டேன்.  அப்பொழுதே என்னுடைய சிற்றூரான சிவன்மலை கிளைக்கழகச் செயலாளராக நான் என்னுடைய கட்சிப்பணியைத் துவக்கினேன். சிறப்பாக கட்சிப்பணி ஆற்றி, புரட்சித்தலைவி அம்மா பேரவையை 1985-லே என்னுடைய பகுதியிலே உருவாக்கி அம்மா மனதிலே இடம் பெற்றவன்நான்.

அம்மா செல்வாக்கில் வெற்றி...

1989ல் அம்மா தன்னந்தனியாக சட்டமன்ற தேர்தலை சந்தித்தபோது, அம்மா அணியிலே, சேவல் அணியில் நான் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே போட்டியிட்டு அம்மாவுடைய செல்வாக்கால் அன்று எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவன். அதற்குப் பிறகு, 1991-ல் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் அம்மாவினுடைய செல்வாக்கிலே வெற்றி பெற்றேன். பிறகு 1993ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தினுடைய தலைவராகவும், சேலம் மாவட்ட திருக்கோவில் வாரியத்தினுடைய தலைவராகவும் நான் சிறப்பான முறையிலே பணியாற்றினேன்.

கூடுதல் பொறுப்பு

திருச்செங்கோடு நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது, அம்மா திருச்செங்கோடு நாடாளுமன்ற கழக வேட்பாளராக அ.தி.மு.க.விலே போட்டியிடும் வாய்ப்பை தந்தார்கள். அப்பொழுது நான் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினேன்.  ஆகவே, இப்படி என்னுடைய வரலாறு இருக்கின்றது. 
அதற்குப் பிறகு 2011ல் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே போட்டியிட்டு, வெற்றி பெற்று அம்மா அமைச்சரவையிலே நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறை முகங்கள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று திறம்பட நான் பணியாற்றினேன். 2016 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அம்மா தலைமையிலே நல்ல ஆட்சி அமைக்கப்பட்டது. அமைச்சரவையிலே எனக்கு நெடுஞ்சாலைத் துறை, சிறுதுறைமுகங்கள் துறை, கூடுதலாக பொதுப்பணித்துறையையும் அம்மா வழங்கினார்கள். 

மாவட்ட செயலாளர்

ஆகவே, என்னுடைய அரசியல் வரலாறு இப்படி நான் கழகத்திலே பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கின்றேன்.  1991ல் சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்து இருந்தபொழுதே மாவட்டக் கழகத்தினுடைய செயலாளராக இருந்து பணியாற்றியவன். ஆதேபோல கழகத்திலே கொள்கைபரப்பு செயலாளராகவும், அமைப்புச் செயலாளராகவும் இருந்து பணியாற்றி இருக்கிறேன்.  அம்மா என்னை தலைமைச் நிலையச் செயலாளராகவும், மாவட்டக் கழகச் செயலாளராகவும் பணியாற்றும் வாய்ப்பினை அளித்தார்கள். 

என்னை வளர்த்தவர் அம்மா

என்னுடைய அரசியல் பணி இப்படி இருந்திருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், இன்றைக்கு (நேற்று) காலையிலே பத்திரிகையை பார்த்ததன் காரணமாக, இந்த நிகழ்ச்சியிலே இதை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். ஆகவே, என்னை வளர்த்தவர் அம்மா ஒருவர் தான் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன். நான் மட்டுமல்ல, இங்கே மேடையிலே இருக்கின்ற அத்தனை கழகத் தொண்டர்களையும், இங்கே வருகை தந்துள்ள அத்தனை கழக நிர்வாகிகளையும் உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆர் அவர்களையும், அம்மா அவர்களையும் சாரும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago