எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி, என்னை வளர்த்தவர் அம்மா ஒருவர்தான் என்று ஊட்டி மலர் கண்காட்சி விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
மலர் கண்காட்சி
ஊட்டியில் நேற்று 121-வது மலர் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். பிறகு அரசு தாவரவியல் பூங்காவில் மலர்களை அவர் பார்வையிட்டார். விழாவில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். பிறகு அவர் விழாவில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
நேற்றைய தினம் ஒருவர் குறிப்பிட்டதாக பத்திரிகையிலே செய்தி ஒன்றை காலையில் பார்த்தேன். ஒருவரால் நான் பார்த்து வளர்க்கப்பட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள், அதுதவறு. புரட்சித்தலைவி அம்மா என்ற தெய்வத்தால் நான் வளர்க்கப்பட்டவன். 1974ல் பொதுவாழ்க்கையில் நான் ஈடுபட்டேன். அப்போது அ.தி.மு.க.வில் என்னைநான் இணைத்துக் கொண்டேன். அப்பொழுதே என்னுடைய சிற்றூரான சிவன்மலை கிளைக்கழகச் செயலாளராக நான் என்னுடைய கட்சிப்பணியைத் துவக்கினேன். சிறப்பாக கட்சிப்பணி ஆற்றி, புரட்சித்தலைவி அம்மா பேரவையை 1985-லே என்னுடைய பகுதியிலே உருவாக்கி அம்மா மனதிலே இடம் பெற்றவன்நான்.
அம்மா செல்வாக்கில் வெற்றி...
1989ல் அம்மா தன்னந்தனியாக சட்டமன்ற தேர்தலை சந்தித்தபோது, அம்மா அணியிலே, சேவல் அணியில் நான் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே போட்டியிட்டு அம்மாவுடைய செல்வாக்கால் அன்று எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவன். அதற்குப் பிறகு, 1991-ல் எடப்பாடி சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் அம்மாவினுடைய செல்வாக்கிலே வெற்றி பெற்றேன். பிறகு 1993ல் சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தினுடைய தலைவராகவும், சேலம் மாவட்ட திருக்கோவில் வாரியத்தினுடைய தலைவராகவும் நான் சிறப்பான முறையிலே பணியாற்றினேன்.
கூடுதல் பொறுப்பு
திருச்செங்கோடு நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது, அம்மா திருச்செங்கோடு நாடாளுமன்ற கழக வேட்பாளராக அ.தி.மு.க.விலே போட்டியிடும் வாய்ப்பை தந்தார்கள். அப்பொழுது நான் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினேன். ஆகவே, இப்படி என்னுடைய வரலாறு இருக்கின்றது.
அதற்குப் பிறகு 2011ல் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே போட்டியிட்டு, வெற்றி பெற்று அம்மா அமைச்சரவையிலே நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறை முகங்கள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று திறம்பட நான் பணியாற்றினேன். 2016 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அம்மா தலைமையிலே நல்ல ஆட்சி அமைக்கப்பட்டது. அமைச்சரவையிலே எனக்கு நெடுஞ்சாலைத் துறை, சிறுதுறைமுகங்கள் துறை, கூடுதலாக பொதுப்பணித்துறையையும் அம்மா வழங்கினார்கள்.
மாவட்ட செயலாளர்
ஆகவே, என்னுடைய அரசியல் வரலாறு இப்படி நான் கழகத்திலே பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கின்றேன். 1991ல் சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்து இருந்தபொழுதே மாவட்டக் கழகத்தினுடைய செயலாளராக இருந்து பணியாற்றியவன். ஆதேபோல கழகத்திலே கொள்கைபரப்பு செயலாளராகவும், அமைப்புச் செயலாளராகவும் இருந்து பணியாற்றி இருக்கிறேன். அம்மா என்னை தலைமைச் நிலையச் செயலாளராகவும், மாவட்டக் கழகச் செயலாளராகவும் பணியாற்றும் வாய்ப்பினை அளித்தார்கள்.
என்னை வளர்த்தவர் அம்மா
என்னுடைய அரசியல் பணி இப்படி இருந்திருக்கிறது என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், இன்றைக்கு (நேற்று) காலையிலே பத்திரிகையை பார்த்ததன் காரணமாக, இந்த நிகழ்ச்சியிலே இதை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன். ஆகவே, என்னை வளர்த்தவர் அம்மா ஒருவர் தான் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன். நான் மட்டுமல்ல, இங்கே மேடையிலே இருக்கின்ற அத்தனை கழகத் தொண்டர்களையும், இங்கே வருகை தந்துள்ள அத்தனை கழக நிர்வாகிகளையும் உருவாக்கிய பெருமை எம்.ஜி.ஆர் அவர்களையும், அம்மா அவர்களையும் சாரும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.