எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, கல்வி, சுகாதாரத்திற்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க ஸ்ரீநகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்
ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலும் அளிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களின் சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகின்றது. ஜி.எஸ்.டி சட்டம் குறித்த இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களின் முக்கிய அதிகாரிகளும், அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
இறுதி முடிவு
இக்கூட்டத்தில், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதிஅமைச்சர்அருண்ஜெட்லி இந்த தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பெரும்பாலான பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரிகள் குறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், எந்தெந்த பொருட்களுக்கு விலக்கு அளிப்பது என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்விக்கு விலக்கு
மொத்தத்தில் நான்கு விதமான வரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 5%, 12% மற்றும் சராசரியாக 18 % இறுதியில் ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீதம் என வரி விதிக்கப்படும். பெரும்பாலும் போக்குவரத்து சேவைக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ஜி.எஸ்.டி மசோதா நுகர்வோருக்கு ஏதுவானதாக இருக்கும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஜி.எஸ்.டி.-யில் இருந்து விலக்கு அளிக்கப்படும்” என்றார். முன்னதாக பாலுக்கு ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய தானியங்களின் விலையும் கண்டிப்பாக குறையும் என்று கூறப்பட்டது.
பொதுவாக வரிவிதிப்பு 4 பிரிவுகளின் கீழே பிரிக்கப்பட்டுள்ளன. 5, 12, 18, 28 என்ற சதவீத அடிப்படையிலேயே வரிகள் விதிக்கப்பட உள்ளன. பெரும்பாலான பொருட்கள் 18 சதவீதம் வரி என்ற பிரிவின் கீழே கொண்டு வரப்பட்டுள்ளன.
வரியில்லா பொருட்கள்:
இறைச்சி, மீன்கள், சிக்கன், முட்டை, பால், தயிர், மோர், தேன், பழங்கள், காய்கறிகள், மாவு வகைகள், பிரெட், கோயில் பிரசாதங்கள், உப்பு, குங்குமம், பொட்டு, தபால் தலைகள், முத்திரைத் தாள்கள், புத்தகங்கள், செய்திதாள்கள், வளையல்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை.
5 சதவீதம் வரி :
மீன் பொருட்கள், க்ரீம், பதப்படுத்தப்பட்ட பால் பவுடர், பிராண்டட் பன்னீர், உலர் காய்கறிகள், காபி, டீ, மசாலா பொருட்கள், பீசா பிரட், ரஸ்க், ஜவ்வரிசி, மண்ணெண்ணைய், நிலக்கரி, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், படகுகளில் உயிர் காக்கும் சாதனங்கள்.
12 சதவீதம் வரி :
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், வெண்ணை, பாலாடை, நெய், பேக் செய்யப்பட்ட உலர் பழங்கள், மிருக கொழுப்புக்கள், பழச்சாறுகள், நாய் உணவுகள், ஆயுர்வேத மருந்துகள், பல்பொடி, அகர்பத்தி, வண்ணப் பயிற்சி புத்தகங்கள், படங்களுடனான புத்தகங்கள், குடை, தையல் மிஷின், மொபைல் போன்கள்.
18 சதவீதம் வரி :
பெரும்பாலான பொருட்கள் இந்த பிரிவின் கீழே வருகின்றன. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, பாஸ்தா, கார்ன்பிளக்ஸ், கேக் வகைகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஜாம், சாஸ், சூப் வகைகள், ஐஸ்க்ரீம், துரித உணவு மசாலாக்கள், மினரல் வாட்டர், டிஸ்யூ பேப்பர்கள், என்வலப் கவர்கள், நோட்கள், இரும்பு பொருட்கள், மின்சாதன பொருட்கள், கேமிரா, ஸ்பீக்கர்கள், மானிட்டர்கள்.
28 சதவீதம் வரி :
சூயிங்கம், மொலாசஸ், கொக்கோ சேர்க்கப்பட்டாத சாக்லேட்கள், சாக்லேட் உடனான மொறு மொறுப்பு உணவுகள், பான் மசாலா, சோடா போன்ற நுரைதன்மை கொண்ட பானங்கள், பெயிண்ட், டியோடரன்ட், ஷேவிங் க்ரீம், ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள், ஷாம்பூ, டை, சன்ஸ்க்ரீன், வால்பேப்பர், செராமிக் டைல்ஸ், வாட்டர் ஹீட்டர், டிஸ்வாசர், வெயிட் மிஷின்கள், வாஷிங் மிஷின், ஏடிஎம், வென்டிங் மிஷின்கள், வாக்யூம் க்ளீனர், ஷேவிங் பொருட்கள், ஹேர் க்ளிப்பர்ஸ், ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள், தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், சிறிய ரக படகுகள்.
ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.