முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு மாவட்டத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      ஈரோடு
Image Unavailable

நாடு  முழுவதும்  முன்னாள்  பாரத பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு நாள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர்,   தலைமையில் கொடுஞ்செயல் நாள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொடுஞ்செயல் நாள் எதிர்ப்பு உறுதிமொழியான

உறுதிமொழி

அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம்நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம்.  எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும் நாம் உறுதி கூறுகிறோம்” என்ற உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர்   வாசிக்க அதனை பின்தொடர்ந்து அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியினை திரும்பக் கூறி கொடுஞ்செயல் நாள் எதிர்ப்பு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்  மொடக்குறிச்சி வட்டாட்சியர் எம்.மாசிலாமணி உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்