முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன் வாழ்த்து

சனிக்கிழமை, 20 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மு.க. ஸ்டாலின்,

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  மாணவர்கள் கல்லூரி கல்விக்கு ஏற்ற வகையில் தங்களுக்கு விருப்பமான பிரிவுகளில் மேல் நிலைப் பள்ளியில் சேர்ந்து விஞ்ஞானிகளாக, மருத்துவர் களாக, பொறியாளர்களாக, நல்ல நிர்வாகிகளாக உருவாக வேண்டும் என வாழ்த்துகிறேன். தேர்ச்சி பெறாதவர்கள் துவண்டுவிடாமல், கல்வியை தொடர்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார். 

ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்ந்து கடின உழைப்பை மேற்கொண்டு சிறந்து விளங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்